தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rahu Dosha: விடாத ராகு தோஷம் - பலன்களை அள்ளித்தரும் பரிகாரம்

Rahu Dosha: விடாத ராகு தோஷம் - பலன்களை அள்ளித்தரும் பரிகாரம்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 21, 2023 11:23 AM IST

ராகு தோஷத்தில் இருந்து தப்பிக்க சில பொதுவான எளிய பரிகாரங்களை இங்கே காண்போம்.

ராகு  தோஷ பரிகாரங்கள்
ராகு தோஷ பரிகாரங்கள்

ராகு தோஷ பரிகாரங்கள்

  • தீய சக்திகளை போக்கக்கூடிய துர்க்கை அம்மனுக்குத் தினமும் பூஜை செய்து வழிபாடு செய்ய வேண்டும்.

 

  • அரசமரம் மற்றும் வேப்பமரத்து அடியில் வீற்றிருக்கும் நாகராஜர் மற்றும் விநாயகர் சிலைகளை ஒன்பது முறை வலம் வந்து வழிபாடு செய்ய வேண்டும்.

 

  • உங்களுக்கு ஜாதகத்தில் கிரக வீட்டில் அதன் அதிபர்கள் அமர்ந்திருக்கும் கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும்.

 

  • கோயில்களில் நவகிரக பீடத்தில் வீற்றிருக்கும் ராகு பகவானைத் தினசரி வளம் வந்து வழிபாடு செய்ய வேண்டும். தோஷத்தின் தீவிரத்தைப் பொறுத்து உங்களது சுற்றுகளின் அளவுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து 48 நாட்களும் வளம் வந்தால் தோஷங்கள் விளக்கும் எனக் கூறப்படுகிறது.

 

  • ராகு பகவானுக்கு உரிய அஷ்டோத்திர மந்திரங்களைத் தினசரி ஒரு முறையாவது சொல்லி வழிபாடு செய்ய வேண்டும்.

 

  • கேது பகவானுக்குப் பரிகாரம் செய்ய வேண்டும் என்றால் காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தன் கோயிலில் வழிபாடு செய்ய வேண்டும்.

 

  • வெள்ளி உலோகத்தில் ஐந்து தலைகள் கொண்ட நாகராஜன் சிலையைச் செய்து அதனைப் பூஜை செய்து வழிபாடு செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

 

  • விநாயகர் கேது பகவானுக்கு அதிதேவதை ஆவார். முதல் கடவுளாக விளங்கக்கூடிய விநாயகப் பெருமானுக்கு ஞாயிற்றுக்கிழமை அன்று தவறாமல் வழிபாடு செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

 

  • நாகர்கோவிலில் வீற்றிருக்கும் நாகூர் தலத்திற்கு சென்று நாக வழிபாடு செய்தால் தோஷங்கள் விளக்கும் எனக் கூறப்படுகிறது.

 

  • அரச மரத்தடியில் வீற்றிருக்கக்கூடிய நாகர் சிலைக்கு வழிபாடு, பால் ஊற்றி வழிபாடு செய்தால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் உள்ளிட்டவை கிடைக்கும் என நம்பப்படுகிறது.

 

  • குறிப்பாகவே நவகிரகங்களுக்கும் தானங்கள் செய்தால் மிகவும் பிடிக்கும். அதன் காரணமாக மற்றவர்களுக்கு தானம் செய்தால் உங்களது தோஷத்தின் பாதிப்பு குறையும்.

 

  • ராகு பகவானுக்கு உளுந்து தானியம் மிகவும் விஷேசமாகக் கருதப்படுகிறது.

 

  • ராகு பகவானுக்கு அதி தேவதையாகப் பத்ரகாளி விளக்குகிறார். எனவே சிவன் கோவில்களில் வடக்கு பார்த்த நிலையில் வீற்றிருக்கும் துர்க்கை அம்மனுக்கு வெள்ளிக்கிழமை தோறும் எலுமிச்சை பல தோளில் விளக்கு ஏற்று வழிபாடு செய்தால் அனைத்து தோஷங்களும் நீங்கும்.

 

  • ராகுபகவானுக்கு உளுந்து வடை மிகவும் விசேஷமான பொருளாகும். அதனை ராகு பகவானுக்கு நெய் வைத்தியம் செய்துவிட்டு மற்றவர்களுக்கு தானம் செய்தல் வேண்டும்.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்