Rahu Dosha: விடாத ராகு தோஷம் - பலன்களை அள்ளித்தரும் பரிகாரம்
ராகு தோஷத்தில் இருந்து தப்பிக்க சில பொதுவான எளிய பரிகாரங்களை இங்கே காண்போம்.
ராகு தோஷ பரிகாரங்கள்
ஜாதகத்தில் ராகு பகவான் இருக்கக்கூடிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப தனித்தனியான பரிகாரங்கள் இருந்தாலும், ராகு தோஷத்தால் சிக்கித் தவிப்பவர்கள் செய்ய வேண்டிய பொதுவான பரிகார வழிபாடுகள் குறித்து இங்கே காண்போம்.
ராகு தோஷ பரிகாரங்கள்
- தீய சக்திகளை போக்கக்கூடிய துர்க்கை அம்மனுக்குத் தினமும் பூஜை செய்து வழிபாடு செய்ய வேண்டும்.
- அரசமரம் மற்றும் வேப்பமரத்து அடியில் வீற்றிருக்கும் நாகராஜர் மற்றும் விநாயகர் சிலைகளை ஒன்பது முறை வலம் வந்து வழிபாடு செய்ய வேண்டும்.
- உங்களுக்கு ஜாதகத்தில் கிரக வீட்டில் அதன் அதிபர்கள் அமர்ந்திருக்கும் கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும்.
- கோயில்களில் நவகிரக பீடத்தில் வீற்றிருக்கும் ராகு பகவானைத் தினசரி வளம் வந்து வழிபாடு செய்ய வேண்டும். தோஷத்தின் தீவிரத்தைப் பொறுத்து உங்களது சுற்றுகளின் அளவுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து 48 நாட்களும் வளம் வந்தால் தோஷங்கள் விளக்கும் எனக் கூறப்படுகிறது.
- ராகு பகவானுக்கு உரிய அஷ்டோத்திர மந்திரங்களைத் தினசரி ஒரு முறையாவது சொல்லி வழிபாடு செய்ய வேண்டும்.
- கேது பகவானுக்குப் பரிகாரம் செய்ய வேண்டும் என்றால் காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தன் கோயிலில் வழிபாடு செய்ய வேண்டும்.
- வெள்ளி உலோகத்தில் ஐந்து தலைகள் கொண்ட நாகராஜன் சிலையைச் செய்து அதனைப் பூஜை செய்து வழிபாடு செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
- விநாயகர் கேது பகவானுக்கு அதிதேவதை ஆவார். முதல் கடவுளாக விளங்கக்கூடிய விநாயகப் பெருமானுக்கு ஞாயிற்றுக்கிழமை அன்று தவறாமல் வழிபாடு செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
- நாகர்கோவிலில் வீற்றிருக்கும் நாகூர் தலத்திற்கு சென்று நாக வழிபாடு செய்தால் தோஷங்கள் விளக்கும் எனக் கூறப்படுகிறது.
- அரச மரத்தடியில் வீற்றிருக்கக்கூடிய நாகர் சிலைக்கு வழிபாடு, பால் ஊற்றி வழிபாடு செய்தால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் உள்ளிட்டவை கிடைக்கும் என நம்பப்படுகிறது.
- குறிப்பாகவே நவகிரகங்களுக்கும் தானங்கள் செய்தால் மிகவும் பிடிக்கும். அதன் காரணமாக மற்றவர்களுக்கு தானம் செய்தால் உங்களது தோஷத்தின் பாதிப்பு குறையும்.
- ராகு பகவானுக்கு உளுந்து தானியம் மிகவும் விஷேசமாகக் கருதப்படுகிறது.
- ராகு பகவானுக்கு அதி தேவதையாகப் பத்ரகாளி விளக்குகிறார். எனவே சிவன் கோவில்களில் வடக்கு பார்த்த நிலையில் வீற்றிருக்கும் துர்க்கை அம்மனுக்கு வெள்ளிக்கிழமை தோறும் எலுமிச்சை பல தோளில் விளக்கு ஏற்று வழிபாடு செய்தால் அனைத்து தோஷங்களும் நீங்கும்.
- ராகுபகவானுக்கு உளுந்து வடை மிகவும் விசேஷமான பொருளாகும். அதனை ராகு பகவானுக்கு நெய் வைத்தியம் செய்துவிட்டு மற்றவர்களுக்கு தானம் செய்தல் வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்