தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Varahi Amman: வரம் தரும் வராஹி விரதம் - எந்த கிழமையில் என்ன பலன்?

Varahi Amman: வரம் தரும் வராஹி விரதம் - எந்த கிழமையில் என்ன பலன்?

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 24, 2023 12:18 PM IST

வராகி அம்மனுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால் கிடைக்கும் பலன்கள் குறித்து இங்கே காண்போம்.

வராஹி விரதம்
வராஹி விரதம்

சரியான முறையில் விரதமிருந்து வழிபட்டால் பக்தர்களுக்குப் பல நன்மைகள் கிடைக்கும் என ஆன்மீகம் கூறுகிறது. ஒவ்வொரு கிழமையும், ஒவ்வொரு விரதம் உண்டு அதற்கு ஏற்ற பலன்களும் உண்டு. அந்த விரதங்களின் விவரங்கள் குறித்து இங்கே காண்போம்.

  • வராஹி அம்மனுக்கு வெள்ளிக்கிழமை அன்று விரதம் இருந்து வழிபட்டான் மாங்கல்ய பலமும், வியாபார விருத்தியும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
  • ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் நோய் நீங்கி ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
  • திங்கட்கிழமை அன்று விரதம் இருந்து வழிபட்டு மனநல பாதிப்பு மனக் கவலைகள் போன்றவை அனைத்தும் நீங்கும் என ஆன்மீகம் கூறுகிறது.
  • செவ்வாய்க்கிழமை அன்று விரதம் இருந்து வழிபாடு செய்தால் வழக்கு, வீடு, நிலம் போன்ற சிக்கல்கள் நீங்கும் என்பது ஐதீகமாகும்.
  • கடன் சிக்கல்கள் நீங்க வேண்டுமென்றால் புதன்கிழமை என்றும் வராஹி அம்மனுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும்.
  • வியாழக்கிழமை அன்று விரதம் இருந்து வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம் மற்றும் கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
  • எந்த காரியத்தில் இறங்கினாலும் வராஹி அம்மனின் வழிபாடு செய்தால் அந்த காரியத்தில் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகமாகக் கூறப்படுகிறது.

விரத முறை

விரதம் இருக்கும் நாட்களில் சர்க்கரைப் பொங்கல், கேசரி மற்றும் தேங்காய் பூரணம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைச் செய்து வராஹி அம்மனுக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும். மேலும் சக்கரவள்ளி கிழங்கு வெள்ளரிக்காய் ஆகியவற்றையும் நைவேத்தியம் செய்து வழிபாடு செய்யலாம்.

வராஹி அம்மனுக்கு உகந்த நிறமாகப் பச்சை நிறம் உள்ளது. விரதம் இருக்கும் நாட்களில் பச்சை நிற துண்டின் மீது அமர்ந்து இலுப்பை எண்ணெய்யை தீபமாக ஏற்றி கிழக்கு நோக்கி ஏற்றினால் வடக்குப் புறம் அமர்ந்து கொள்ள வேண்டும்.

வடக்கு நோக்கி ஏற்றினால் கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும். வேறு திசைகளில் பழங்கள் கிடைக்காது எனக் கூறப்படுகிறது.

வளர்பிறை பஞ்சமி திதி திருநாளில் வராஹி அம்மனின் விரதமிருந்து மனதார வழிபாடு செய்தால் தீய சக்திகள் அனைத்தும் நீங்கி வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும் என்பது ஐதீகமாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

WhatsApp channel

டாபிக்ஸ்