தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  ஐபிஎல் தொடங்கும் முன்னே ஆர்சிபிக்கு சோதனை! காயத்தால் ஆல்ரவுண்டர் விலகல்

ஐபிஎல் தொடங்கும் முன்னே ஆர்சிபிக்கு சோதனை! காயத்தால் ஆல்ரவுண்டர் விலகல்

Mar 16, 2023, 12:27 PM IST

IPL 2023: கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியினரால் எடுக்கப்பட்ட இங்கிலாந்து ஆல்ரவுண்ட்ர் வில் ஜாக்ஸ் காயம் காரணமாக ஐபிஎல் 2023 தொடரிலிருந்து விலகியுள்ளார். (AFP)
IPL 2023: கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியினரால் எடுக்கப்பட்ட இங்கிலாந்து ஆல்ரவுண்ட்ர் வில் ஜாக்ஸ் காயம் காரணமாக ஐபிஎல் 2023 தொடரிலிருந்து விலகியுள்ளார்.

IPL 2023: கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியினரால் எடுக்கப்பட்ட இங்கிலாந்து ஆல்ரவுண்ட்ர் வில் ஜாக்ஸ் காயம் காரணமாக ஐபிஎல் 2023 தொடரிலிருந்து விலகியுள்ளார்.

மகளிர் ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், ஆண்கள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்கு ஒவ்வொரு அணிகளும் தயாராகி வருகின்றன.

ட்ரெண்டிங் செய்திகள்

Sunil Chhetri announces retirement: ஓய்வை அறிவித்தார் இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி.. கடைசி போட்டி இதுதான்

Italian Open: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷ்ய முன்னணி வீரர் தோல்வி

Italian Open Tennis: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் விளையாட தயாராக இருக்கும் வீராங்கனைகள்!

Novak Djokovic: 'தலையில் பாட்டில் விழுந்ததால் வலி'-இத்தாலியன் ஓபனில் நோவக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

உலகின் சிறந்த நட்சத்திர வீரர்கள் கொண்டிருக்கும் அணியாக இருந்தாலும் ஆர்சிபி அணிக்கு ஐபிஎல் கோப்பை என்பது இப்போது வரையிலும் கனவாக உள்ளது. ஒவ்வொரு முறை ஏலத்தின்போது சிறந்த வீரர்களை தேர்வு செய்யும் அந்த அணி ஏனோ இதுவரை கோப்பையை தன்வசம் ஆக்கி கொள்ள முடியாத அணியாகவே இருந்து வருகிறது.

ஐபிஎல் 2023 தொடருக்காக கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஏலத்தில் இங்கிலாந்தை சேர்ந்த ஆல்ரவுண்டரான் வில் ஜாக்ஸ் என்பவரை ரூ. 3.2 கோடியில் ஆர்சிபி அணி வாங்கியது. ஏற்கனவே ஆர்சிபியில் கிளென் மேக்ஸ்வெல் இருக்கும் நிலையில், மிடில் ஆர்டருக்கு கூடுதல் பலத்தை சேர்க்கும் விதமாக வில் ஜாக்ஸை வாங்கியது.

இதையடுத்து ஐபிஎல் தொடர் மார்ச் 31ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் வங்கதேசத்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் விளையாடியபோது வில் ஜாக்ஸ் காயமடைந்துள்ளார். இரண்டாவது ஒரு நாள் போட்டியில் பீல்டிங் செய்தபோது அவரது தசையில் காயம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர் காயத்தை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள், ஓய்வில் இருக்கமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய சூழ்நிலையில் அவரது ஆட்டத்தை பார்த்து, இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் வில் ஜாக்ஸை இங்கிலாந்து அணியில் சேர்ப்பதற்கான முடிவில் அந்நாட்டு வாரியமும் இருந்ததாக கூறப்படும் நிலையில், வில் ஜாக்ஸ் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

அவருக்கு பதிலாக நியூசிலாந்து அணி வீரர் மைக்கேல் பிரேஸ்வெல்லை அணியில் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தையில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. நியூசிலாந்து அணியில் உச்சகட்ட பார்மில் இருந்து வரும் பிரேஸ்வெல் இதற்கு முன்னதாக ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றது இல்லை.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி ஏப்ரல் 2ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி