தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Health Tip: ரத்தத்தை இயற்கையாக சுத்திகரிக்கும் சூப்பர் உணவுகள்

Health Tip: ரத்தத்தை இயற்கையாக சுத்திகரிக்கும் சூப்பர் உணவுகள்

I Jayachandran HT Tamil

Jun 16, 2023, 08:33 PM IST

ரத்தத்தை இயற்கையாக சுத்திகரிக்கும் சூப்பர் உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
ரத்தத்தை இயற்கையாக சுத்திகரிக்கும் சூப்பர் உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

ரத்தத்தை இயற்கையாக சுத்திகரிக்கும் சூப்பர் உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

உடல் இயக்கத்துக்கு அத்தியாவசியம் நமது ரத்தம். இந்த ரத்தத்தை இதயம், நுரையீரல், சிறுநீரகம் ஆகியவை சுத்திகரிக்கின்றன. இருப்பினும் அதில் நச்சுப்பொருள்கள் சில தேங்கத்தான் செய்யும். இயற்கையான முறையில் சில உணவுகளை சாப்பிடுவதன்மூலம் ரத்தத்தை சுத்திகரிக்க முடியும்.

ட்ரெண்டிங் செய்திகள்

Parenting Tips : குழந்தைகள் திரையிலே மூழ்கிக்கிடக்கிறார்களா? அவர்களை விளையாட அழைத்துச் செல்வது எப்படி?

Benefits of Soaked Dry Figs : உலரவைத்த அத்தியை ஊறவைத்து சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை பாருங்கள்!

Pain Reliver Oil : ஒரே ஒரு எண்ணெய் போதும்! உடலின் மொத்த வலியையும் அடித்து விரட்டும்!

Benefits of Drumstick : பெண்களுக்கு குழந்தை பாக்கியம் தரும்! முருங்கைகாயில் எத்தனை நன்மைகள் உள்ளது பாருங்க!

தொடர்ந்து மாதுளை உண்பதன் மூலம், கொஞ்சம் கொஞ்சமாக ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, ரத்தத்தின் ஆக்சிஜன் அளவை மேம்படுத்தலாம். இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் ரத்தத்தைச் சுத்திகரிக்கிறது. ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது. செரிமானத்தைச் சீராக்கி, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது

செம்பருத்திப் பூவின் இதழ்களை நன்றாகச் சுத்தம் செய்து, காய வைத்து பொடி செய்து அதை தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் 1 கிளாஸ் வெந்நீரில் 1 ஸ்பூன் செம்பருத்தி பூவின் பொடியை கலந்து குடித்து வந்தால், நமது உடலின் சோர்வை குறைந்து ரத்தத்தை தூய்மை அடையச் செய்யும்.

செம்பருத்தி பூவின் இதழ்களை நறுக்கி, அதில் எலுமிச்சை சாறு விட்டு வெயிலில் வைத்து பிசைந்து சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை கலந்து காய்ச்சி வடிகட்டி நீரில் கலந்து குடித்து வர வேண்டும்.

அதேப்போன்று, தினமும் நமது உணவில் பீட்ரூட்டை சமைத்து சாப்பிட்டு வந்தால், நமது உடம்பில் புத்தம் புதிய ரத்தம் உற்பத்தியாகும். பீட்ரூட்டை நறுக்கிப் பச்சையாக எலுமிச்சைப்பழ சாற்றில் கலந்து சாப்பிட்டால், ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்.

முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச்சத்து அதிகமாக இருக்கின்றது. எனவே இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை இருப்பவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் உற்பத்தியாகும்.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு முட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வந்தால், ரத்தம் விருத்தியாகும்.

முருங்கை இலை சாறுடன் பால் கலந்து கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்குக் கொடுத்தால், ரத்தம் சுத்தம் அடைவதுடன், எலும்புகள் வலிமையடையும்.

எலுமிச்சை சாறில் இருக்கும் அமிலத்தன்மை உடலின் பி.எச் அளவை சமநிலைப்படுத்தும். நச்சுக்களை அகற்றவும் செய்யும். பாக்டீரியா, வைரஸ்கள், பிற நச்சுக்களை கொல்லும் தன்மையும் இதற்கு உண்டு. காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறை கலந்து பருகி வந்தால் ரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மை நீங்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி