தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Health Tips: கோதுமைப் புல்லின் நிறைந்திருக்கும் அபூர்வ மருத்துவப் பயன்கள்

Health Tips: கோதுமைப் புல்லின் நிறைந்திருக்கும் அபூர்வ மருத்துவப் பயன்கள்

I Jayachandran HT Tamil

May 24, 2023, 06:00 PM IST

கோதுமைப் புல்லின் நிறைந்திருக்கும் அபூர்வ மருத்துவப் பயன்கள் குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.
கோதுமைப் புல்லின் நிறைந்திருக்கும் அபூர்வ மருத்துவப் பயன்கள் குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

கோதுமைப் புல்லின் நிறைந்திருக்கும் அபூர்வ மருத்துவப் பயன்கள் குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

நமது உடல் மிகச்சிறப்பாக இயங்குவதற்கு 19 அமினோ அமிலங்களும், 92 தாதுக்களும் தேவை. அவை இந்த கோதுமைப்புல்லில் நிறைந்துள்ளது. எனவே உடல் ஆரோக்கியத்துக்கு மிகச்சிறந்ததாகக் கோதுமைப் புல் கருதப்படுகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Health Alert : பேக்கிங் உணவுகளால் உயரும் சர்க்கரை அளவு.. அதிகரிக்கும் குழந்தைகளின் உடல் எடை!

Fatty Liver in Diabetics: கொழுப்பு கல்லீரல் பிரச்சனை.. நீரிழிவு மற்றும் உடல் பருமன் வரை.. இந்த விஷயத்தில் கவனம் தேவை!

புற்றுநோய், சர்க்கரைநோய் போன்ற நோய்களின் உயிரிழப்புகளுக்கு எது முக்கிய காரணம்- ஜீன்களா? வாழும் நெறிமுறைகளா?

Garlic Peel : இந்த விஷயம் தெரிஞ்சா இனி பூண்டு தோலை கீழ போட மாட்டீங்க.. நீங்கள் இழக்கும் சத்துக்கள் எவ்வளவு தெரியுமா?

இதை ரொட்டிக் கோதுமை என்றும் அழைக்ககின்றனர்.

செயற்கையாக ஒளியூட்டப்பட்ட உள்கூடங்களிலும், கண்ணாடிக் கூரை பொருத்தப்பட்ட கூடங்களிலும் இது பயிரிடப்படுகிறது.

கோதுமைப்புல் பொடி/வீட் கிராஸ் பவுடர் என்பது கோதுமைப் புல்லின் இலைகளை அரைத்து சாறெடுத்து, பின் அதை உலர வைத்து பொடியாக்கி உணவுப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது

வயலில் இயற்கையாக வளர்ந்துள்ள மூன்று மாதம் நிரம்பிய கோதுமைப்புல்லின் இலைகளை சாறு எடுத்து, நீர்ப்பதம் போக நன்கு உலர வைத்து, அதிலிருந்து கோதுமைப்புல் பொடி தயாரிக்கப்படுகிறது. இந்த பொடி மிகுந்த சத்து நிறைந்தது. காரணம், இதில் குளோரோஃபில் என்னும் பச்சையம் மிகவும் அதிகமாக நிரம்பியுள்ளது.

கோதுமையில் உள்ள க்ளூட்டன் இதில் இல்லை. க்ளூட்டன் செரிமானத்துக்கு ஆகாது. கோதுமைப்புல் பொடியை தண்ணீரில் கலந்து, சத்து பானமாகவும் அல்லது வேறு ஏதாவது ஜூஸ்களில் கலந்தும் அருந்தலாம். கோதுமைப்புல் செடியில் உள்ள அனைத்து சத்துக்களும், கோதுமைப்புல் சாற்றிலும் உள்ளன. இப்போது அந்த கோதுமைப்புல் பொடியின் நன்மைகளைப் பார்ப்போம்.

கோதுமைப்புல் பொடியானது உணவு செரிப்பதை எளிதாக்குகிறது. இதில் அடங்கியுள்ள சில காரத்தன்மையுள்ள தாதுக்களினால், வயிற்றிலுள்ள புண்கள், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு ஆகியவை குணமாகின்றன. முக்கியமாக இதில் உள்ள மெக்னீசியம் மலச்சிக்கலைக் குணப்படுத்துகிறது. சிவப்பணு மற்றும் வெள்ளையணுக்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. கோதுமைப்புல் பொடியில் நிறைந்துள்ள ஏராளமான குளோரோஃபில்கள், ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகப்படுத்த உதவுகின்றன. அதிகமான ஹீமோகுளோபின் உற்பத்தி செய்யப்படுவதால், ரத்தமானது அதிகமான ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லவும், அதன் மூலம் உடல் மேலும் சுறுசுறுப்பாக இயங்கவும் உதவுகிறது.

எடைக் குறைப்பில் உதவுகிறது-

கோதுமைப்புல் பவுடரை ஜூஸ்களிலும், பழரசங்களிலும் சேர்க்கலாம் என்பதால், உடலுக்கு அதிகமான ஆற்றலை அளிக்கிறது. உடற்பயிற்சி நேரங்களில், நீண்ட நேரத்துக்கு உடற்பயிற்சி செய்ய உதவுகிறது. இதனால் உடல் எடை குறைய வழிவகுக்கிறது. தைராய்டு சுரப்பிகளைத் தூண்டி, எடை அதிகரிப்பதைக் குறைக்கிறது. இதன் மூலம் வளர்சிதை மாற்றம் அதிகரித்து, உடல் பெருக்கத்தையும், அஜீரணத்தையும் தடுக்கிறது

ரத்தத்தில் பிஎச் அளவை சமப்படுத்துகிறது

கோதுமைப் புல் பொடியில் காரத்தன்மை அதிகமாக உள்ளதால், ரத்தத்தில் இருக்க வேண்டிய பிஎச் அளவை நிலைப்படுத்தி பேணுகிறது. எனவே, ரத்தத்தில் உள்ள அமிலத்தன்மையைக் குறைத்து, காரத்தன்மையை நிலைநிறுத்த உதவுகிறது.

நச்சு நீக்கும் தன்மை

கோதுமைப்புல் பவுடரில் அற்புதமான நச்சு நீக்கும் தன்மை உள்ளது. புதிய காய்கறிகளில் உள்ள அளவுக்கு, இதிலும் தாதுக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், என்ஸைம்கள் நிறைந்துள்ளன. இதனால் உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்கும் தன்மை பெற்றுள்ளது. ரத்த செல்களின் வலிமையைக் கூட்டுகிறது. ரத்த ஓட்டம் மற்றும் கல்லீரலில் நச்சுத்தன்மையை நீக்குகிறது. குடலை சுத்தப்படுத்தி, புற்றுநோயை ஏற்படுத்தும் கார்ஸினோஜன்களிலிருந்து காக்கிறது.

ரத்த சோகையை குணப்படுத்துகிறது-

வீட் கிராஸில் உள்ள குளோரோபில் மூலக்கூறு அமைப்பானது ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின்களின் மூலக்கூறு அமைப்பை ஒத்துள்ளது. இதிலுள்ள குளோரோபில்லானது எளிதில் உடலால் உறிஞ்சப்பட்டு ரத்த உற்பத்தியையும், ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியையும் அதிகரிக்கச் செய்து, அவற்றை இயல்பான நிலையில் பேண உதவுகிறது. எனவே இது ரத்த சோகையை நீக்க உதவுகிறது.

புற்றுநோயாளிகளுக்கு உதவுகிறது-

இதிலுள்ள குளோரோபில் கதிரியக்கங்களின் தீமையைக் குறைக்கிறது. எனவே கீமோதெரபி, ரேடியோதெரபி மருத்துவத்தை மேற்கொள்ளும் புற்றுநோயாளிகள், வீட் கிராஸ் பவுடரை உணவில் சேர்த்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

சர்க்கரை நோய்க்கு இயற்கை வழியில் தீர்வு

ரத்தத்தில் கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சும் வீதத்தை மட்டுப்படுத்துவதால், சர்க்கரையின் அளவை இது கட்டுப்படுத்த மிகவும் உதவுகிறது. சர்க்கரை நோயை, அது எந்த நிலையில் இருந்தாலும், கட்டுப்படுத்துவதில் இது சிறப்பிடம் வகிக்கிறது.

மூலநோயைக் குணப்படுத்துதல்

மிகவும் பயன் தரக்கூடிய சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளதால், வீட் கிராஸ் பவுடரானது மூல நோயைக் கட்டுப்படுத்தும் இயற்கையான நிவாரணியாகக் கருதப்படுகிறது. இதில் உள்ள குளோரோபில், நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மூலநோயைக் குணப்படுத்தவல்லவை. இதன் காரணமாக மூலநோயாளிகள், வீட் கிராஸ் பவுடரை ஒரு நாளுக்கு இரண்டு தடவை வீதம், மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து உட்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி