தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Healthy Veg: நுரையீரலையும் இதயத்தையும் பாதுகாக்கும் பச்சைப்பட்டாணியின் பயன்கள்

Healthy Veg: நுரையீரலையும் இதயத்தையும் பாதுகாக்கும் பச்சைப்பட்டாணியின் பயன்கள்

I Jayachandran HT Tamil

May 24, 2023, 08:09 PM IST

நுரையீரலையும் இதயத்தையும் பாதுகாக்கும் பச்சைப்பட்டாணியின் பயன்கள் குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.
நுரையீரலையும் இதயத்தையும் பாதுகாக்கும் பச்சைப்பட்டாணியின் பயன்கள் குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

நுரையீரலையும் இதயத்தையும் பாதுகாக்கும் பச்சைப்பட்டாணியின் பயன்கள் குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

காய்கறிகளில் பச்சைப்பட்டாணி மிகவும் சுவையானது. குழம்புக்கும் வறுவலுக்கும் ஏற்றது.

ட்ரெண்டிங் செய்திகள்

Dry Fruits Laddu : தினமும் இதை மட்டும் ஒரு உருண்டை சாப்பிடுங்க! 15 நாளில் முடி உதிர்வது முற்றிலும் சரியாகும்!

Godhumai Laddu: உடலுக்கு பலம் தரும் கோதுமையில் ருசியான லட்டு.. குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை அனைவருக்கும் உகந்தது!

Constipation Remedy : மலச்சிக்கலை விரட்டும் இயற்கை சூரணம்! தினமும் ஒரு ஸ்பூன் மட்டும் போதும்!

Moles Formation : உங்கள் உடலில் இப்படியெல்லாம் மச்சம் உள்ளதா? அதனால் என்ன நடக்கும் தெரியுமா?

வளரும் குழந்தைகள், மருந்து போல் தினமும் மூன்று தேக்கரண்டி பச்சைப் பட்டாணியை உணவில் சேர்த்து வந்தால் மூளை பலம் பெறும்! ஞாபகச்தி அதிகரிக்கும். வெண்டைக்காயில் உள்ளதைவிட மூன்று மடங்கு அதிகமான பாஸ்பரஸ் பச்சைப் பட்டாணியில் இருப்பதால், குழந்தைகளின் புத்திக் கூர்மையும் பலமடங்கு அதிகரிக்கும்.

உடல் ஒல்லியாக இருப்பவர்கள், நாளடைவில் சதைப்பிடிப்புடனும் உடல் வலிவுடனும் வளரப் பச்சைப் பட்டாணியை நன்கு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சைப் பட்டாணியால் உடலுக்குச் சக்தியும் நன்கு கிடைக்கும்.

நுரையீரலுக்கும் இதயத்துக்கும் பலத்தைக் கொடுக்கக்கூடியது பச்சைப் பட்டாணி. எனவே, தினமும் மருந்து போல் ஒருகைப்பிடி அளவு பிற காய்கறிகளுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிடுங்கள். இதனால் இதயம், நுரையீரல்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாது. ஆண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படாமலிருக்கவும் பச்சைப் பட்டாணியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பச்சை பட்டாணியில் உள்ள சத்தில் உலர்ந்த பட்டாணியில் மூன்றில் ஒரு பங்குச் சத்தே கிடைக்கிறது. தோல் நீக்கிய வறுத்த பட்டாணியில் பச்சைப் பட்டாணியின் சத்தில் அரைப் பங்கே கிடைக்கிறது. எனவே, பச்சைப் பட்டாணியையே அதிகம் பயன்படுத்துங்கள்.

சீசன் சமயம் தவிர மற்ற நேரங்களில் உலர்ந்த பட்டாணியை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறப்போட்டு, சமையலில் பயன்படுத்த வேண்டும். இதனால் உலர்ந்த பட்டாணியால் ஏற்படக்கூடிய வாயுக்கோளாறு ஏற்படாமல் தடுக்கப்படும்.

பச்சைப் பட்டாணியில் பாஸ்பரஸ் காணப்படுகிறது. இதனால் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் 100 கிராம் பச்சைப் பட்டாணி சுண்டல் சாப்பிட்டால் அவர்கள் விரைவில் குணமடைவார்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி