தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  தொடர்ந்து தண்ணீ காட்டும் அம்ரித்பால் சிங்!காலிஸ்தான் ஆதரவாளர் ஆயுதங்களுடன் கைது

தொடர்ந்து தண்ணீ காட்டும் அம்ரித்பால் சிங்!காலிஸ்தான் ஆதரவாளர் ஆயுதங்களுடன் கைது

Mar 24, 2023 06:37 PM IST Muthu Vinayagam Kosalairaman
Mar 24, 2023 06:37 PM IST

காலிஸ்தான் விவகாரம் தீவிரமாகி வரும் நிலையில், காலிஸ்தான் ஆதரவு இயக்கத்தின் முகமாக செயல்பட்டு வரும் வாரிஸ் பஞ்சாப் தே அமைப்பு தலைவர் அம்ரித்பால் சிங் போலீசாரால் தேடப்பட்டு வருகிறார். போலீஸுக்கு கண்ணாமூச்சி காட்டி தப்பி வரும் அவர் தற்போது ஹரியாணாவில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. போலீசாரிடம் சிக்க கொள்ளாமல் இருக்க அம்ரித்பால் சிங் பென்ஸ் கார், மாருதி கார், பைக் என மாறி மாறி தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அவரது ஆதரவாளராகவும், அம்ரித்பால் சிங் அமைப்பின் கூட்டாளியாகவும் இருந்து வரும் கூர்க்கா பாபா என்று அழைக்கப்படும் தேஜிந்தர் சிங் கில் என்பவரை கன்னா பகுதியை சேர்ந்த போலீசார் கைது செய்துள்ளனர். தேஜிந்தர் சிங்கிடமிருந்து அம்ரிஸ்டர் பகுதி அருகே காலிஸ்தான் ஆதரவாளர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ளும் விடியோவையும் கைப்பற்றியுள்ளனர். AKF எனப்படும் துப்பாக்கி சுடும் தளத்தை அம்ரித்பால் சிங் தான் நிறுவியுள்ளார். அதன் அதிகாரப்பூர்வ பக்கத்தில் காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் கையில் துப்பாக்கி ஏந்தியவாறு இருக்கும் புகைப்படமும் இடம்பிடித்துள்ளது. அம்ரித்பால் சிங்கின் இந்த எழுச்சிக்கு பாகிஸ்தானை சேர்ந்த உளவு அமைப்பான ஐஎஸ்ஐ பங்கு இருக்ககூடும் என போலீசார் சந்தேக்கின்றன.

More