Weather Update: ‘கடலோர மாவட்டம் முதல் தென் தமிழகம் வரை வெளுக்க போகும் மழை!’ வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
”தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தகவல்”
மழை குறித்தான அப்டேட்!
கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பதிவாகும் வெப்பத்தின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணி நேர வானிலை
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் மழை ஏதும் பதிவாகவில்லை.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. குறைந்த வெப்பநிலை அளவை பொறுத்தவரை சமவெளி பகுதியான நாமக்கலில் 20 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும் மலைப்பகுதியான கொடைக்கானலில் 9.9 டிகிரி செல்ஷிஸ் வெப்பநிலையும் பதிவாகி உள்ளது.