தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Tragedy Where The Mother Committed Suicide Leaving Her Son In The Village

Crime: பாகப்பிரிவினையால் வந்த வினை.. மகனை ஊருணியில் வீசி விட்டு தாய் எடுத்த விபரீத முடிவு!

Pandeeswari Gurusamy HT Tamil
Dec 12, 2023 09:23 AM IST

கணவன் வாங்கிய சொத்தை பாகப்பிரிவினை செய்து பிரித்து கொடுத்ததால் ஆத்திரம் அடைந்த தாய் தன் மகனை ஊருணியில் வீசி விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

க்ரைம் ( கோப்புப்படம் )
க்ரைம் ( கோப்புப்படம் )

ட்ரெண்டிங் செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பகுதியில் உள்ள முத்துப்பேட்டை இந்திரா நகர் பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ். இவர் துபாயில் சென்று வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வனிதா அவருக்கு வயது 38. செல்வராஜ் வனிதா தம்பதிக்கு தவமுகேஷ் (12 ) லிகாஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

இதில் மூத்த மகன் தவமுகேஷ் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இளைய மகன் லிகாஸ் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். செல்வராஜ் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் தனது சொந்த வருமானத்தில் நிலம் ஒன்றை வாங்கி தன் தாயார் பொன்னம்மாள் பெயரில் பதிவு செய்து இருந்ததாக கூறப்படுகிறது.

தற்போது அந்த நிலம் பொதுவானது என்றும் பாகப்பிரிவினை செய்து கொள்ள வேண்டும் என குடும்பத்துக்குள் பிரச்சனை எழுந்தது. ஆனால் நிலம் தங்களுக்கு சொந்தம் என்று செல்வராஜ் மற்றும் வனிதா தம்பதியினர் குடும்பத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதை ஏற்க மறுத்த செல்வராஜின் சகோதரர்களோ நிலத்தை பிரிக்க கூறினார்கள். இதற்காக ஊர் பிரமுகர்களை அழைத்து வைத்து பேசியதில் செல்வராஜ் உள்ளிட்ட சகோதரர்கள் மூன்று பேருக்கும் அந்த நிலத்தை சமமாக பிடித்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் வனிதா விரத்தியில் இருந்துள்ளார். சொத்து பிரச்சனை காரணமாக ஊருக்கு வந்திருந்த செல்வராஜ் மீண்டும் வெளிநாட்டுக்கு கடந்த ஏழாம் தேதி சென்று விட்டார். ஏற்கனவே கடும் மன வருத்தத்தில் இருந்த வனிதா தற்கொலை செய்து கொள்ளும் விபரீத முடிவை எடுத்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில் மகன்கள் தவமுகேஷ் மற்றும் லிகாஸ் ஆகியோரை முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அடப்பான் ஊருணிக்கு அழைத்து சென்றார்.

அங்கு தனது இரண்டு மகன்களையும் ஊருணிக்குள் தள்ளி விட்டார். பின்னர் தானும் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதை சற்றும் எதிர்பாராத மூத்த மகன் தவமுகேஷ் அலறி அடித்துக் கொண்டு நீச்சல் அடித்து கரை வந்து சேர்ந்தார். 

தாயும் தம்பியும் நீரில் மூழ்கியதை கண்ட தவமுகேஷ் செய்வதறியாது திகைத்து அருகில் இருந்த தாத்தா மாரியப்பன் மற்றும் வனிதாவின் தம்பி ஜெகன் குமார் உள்ளிட்டோரிடம் தகவல் தெரிவித்தான். உடனே ஊர் மக்கள் திரண்டு ஊருணிக்குள் இறங்கி தேடினர். நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு வனிதா மற்றும் சிறுவன் லிகாஸ் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்