தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vandavasi Accident : கார் மீது லாரி மோதி விபத்து.. திண்டிவனம் தாசில்தார் பலி!

Vandavasi Accident : கார் மீது லாரி மோதி விபத்து.. திண்டிவனம் தாசில்தார் பலி!

Divya Sekar HT Tamil
Apr 08, 2023 11:02 AM IST

வந்தவாசி அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் தாசில்தார் ஒருவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விபத்து - கோப்புபடம்
விபத்து - கோப்புபடம்

ட்ரெண்டிங் செய்திகள்

பின்னர் காஞ்சிபுரம் கோயிலுக்கு சென்று தரிசனம் முடித்து விட்டு ஊருக்கு திரும்பினார். அப்போது இரவு 10 மணி அளவில் காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் செய்யாறு அடுத்த நெடுங்கல் கூட்ரோடு வந்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் மேல்மருவத்தூரில் இருந்து பால் ஏற்றிக்கொண்டு காஞ்சிபுரம் நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. நெடுங்கல் கூட்ரோடு அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரில் பயணம் செய்த வெங்கட சுப்பிரமணியின் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். பூங்கோதை, சிவசங்கரன் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அனக்காவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வெங்கடசுப்பிரமணி உடலை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் மீது லாரி மோதிய விபத்தில் தாசில்தார் ஒருவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்