‘தவறான தகவல்.. மானநஷ்ட வழக்கு தொடர்வோம்’ நிலஅபகரிப்பு குற்றச்சாட்டுக்கு அறப்போர் இயக்கத்திற்கு நோட்டீஸ்!
‘அமைச்சர் தரப்பினர் உறுப்பினர்களாக இருந்தனர். என்பதன் காரணமாக அந்த காழ்ப்புணர்ச்சியை காட்டுவதற்காக தற்போது அவதூறான செய்தியை பரப்பி நீதிமன்ற ஆணைகளை மறைத்து புறம் பேசி தவறான தகவலை பகிரங்கமாக தெரிவித்ததற்கு நீதிமன்ற நடவடிக்கை எடுக்க இருக்கின்ற சூழலில் இதனுடைய விவரத்தை கீழ்கண்டவாறு தெரிவிக்கிறோம்’

முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது 411 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக, அறப்போர் இயக்கம் நேற்று குற்றம்சாட்டியிருந்தது. இந்நிலையில், அந்த குற்றச்சாட்டில் இடம் பெற்றிருந்த நிறுவனத்தின் பேரில், அதற்கான மறுப்பு அறிக்கையை, வழக்கறிஞர் சரவணக்குமார் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இதோ வழக்கறிஞர் சரவணக்குமார் தெரிவித்துள்ள அறிவிப்பு:
‘‘அறப்போர் இயக்கம் என்ற பெயரில் தவறான தகவல்களை தெரிவித்து டெக்கான் ஃபன் ஐலேன்டு & ஹோட்டல் லிமிடேட் என்ற நிறுவனம் பெற்ற நீதிமன்ற உத்தரவுகளை மறைத்து, அறப்போர் இயக்கம் கொடுத்த குற்றச்சாட்டுகளுக்கான நீதிமன்ற ஆணையுடன் கூடிய தனியார் நிறுவனத்தின் பதில் அறிக்கை .
அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன்களின் பங்கு என்ன?
1991ல் டெக்கான் ஃபன் ஐலேன்டு & ஹோட்டல் லிமிடெட் தன் நிறுவனத்தின் பெயரில் கிரையம் பெற்ற சொத்துக்களை 1992 ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின் (O.S. No.3714 of 1992) மூலம் இது அரசு நிலம் அல்ல தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடம் என்று உறுதி செய்தது. அதனை எதிர்த்து 1994ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. (864/1994) அந்த தீர்ப்பினை 23 ஆண்டுகள் வழக்கு நடைபெற்று 2017ம் ஆண்டு அந்த வழக்கில் நிறுவனத்திற்கு சாதகமாக சென்னை உயர்நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டது இந்த தீர்ப்பின் அடிப்படையிலும் நீதி மன்ற உத்தரவுபடியும் இந்த நிறுவனம் முறையாக செயல்பட்டு வருகிறது. இது தனியார் நிறுவனம் இந்த நிறுவனத்தில் பல்வேறு தரப்பினர் உறுப்பினர்களாக உள்ளனர்.