ஜிஎஸ்டி நோட்டீஸை எதிர்த்து ஹாரிஸ் ஜெயராஜ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
ஜி.எஸ்.டி நோட்டீஸ்க்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் ஹாரிஸ் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை தற்போது நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் 2001 ஆம் ஆண்டு வெளியான மின்னலே படத்தின் மூலம் முதன் முதலாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து மஜ்னு, 12பி என துள்ளல் இசையால் தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்டார். இவரது இசையை முதலில் கேட்ட போது இது ஏ. ஆர். ரகுமான் இசை என ரசிகர்கள் நினைத்து இருந்தனர். ஆனால் இவரது இசை மாறுபட்டு துள்ளல் நிறைந்து இருந்தது. இவரது மெலடி பாடல்களுக்கென தனி பிளே லிஸ்ட்களே உருவாக்கலாம்.
இவர் தற்போது தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த இசையாமைப்பாளராக இருந்து வருகிறார். தொடர்ந்து இசை அமைத்து வந்த ஹாரிஸ் கடந்த 2019 இல் காப்பான், 2022 இல் தி லெஜெண்ட் ஆகிய படங்களைத் தவிர அண்மையில் எந்த படத்திற்கும் இசை அமைக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் வரும் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் ஜெயம் ரவியின் பிரதர் படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் இப்படம் இவருக்கு சிறந்த கம்பேக் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹாரிஸ் இசைக்கு ஜி. எஸ். டி
ஹாரிஸ் இசையமைத்த படங்களுக்கு சேவை வழங்கியதாக சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பது தொடர்பாக, இவருக்கு ஜி.எஸ்.டி இணை இயக்குநர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இது கடந்த 2018 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட நோட்டீஸ் ஆகும். இந்த ஜி.எஸ்.டி நோட்டீஸ்க்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் ஹாரிஸ் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை தற்போது நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர்.