TNPSC புதிய தலைவராக பிரபாகர் ஐ.ஏ.எஸ் நியமனம்! சைலேந்திரபாபுவை ஏற்க மறுத்த ஆளுநர்! இடையில் நடந்தது என்ன?
தமிழ்நாடு அரசுப்பணிகள் தேர்வாணைய தலைவராக பிரபாகர் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அடுத்த 6 ஆண்டுகளுக்கு அவர் இந்த பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC தலைவராக பிரபாகர் ஐ.ஏ.எஸ் நியமனம்!
தமிழ்நாடு அரசுப்பணிகள் தேர்வாணைய தலைவராக பிரபாகர் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அடுத்த 6 ஆண்டுகளுக்கு அவர் இந்த பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
யார் இந்த பிரபாகர் ஐ.ஏ.எஸ்?
1989ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பயிற்சியை நிறைவு செய்த பிரபாகர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர். காலஞ்சென்ற திமுக தலைவர் மு.கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது, அவரது செயலாளராக இருந்தவர் பிரபாகர்.
உள்துறை செயலாளர், தகவல் தொழில் நுட்பத்துறை செயலாளர், வணிக வரித்துறை செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு அரசு பொறுப்புகளை அவர் வகித்து உள்ளார்.