Old Building Collapse: சென்னை அண்ணா சாலையில் கட்டிடம் விழுந்து இளம் பெண் பலி
பழைய கட்டிடம் இடிக்கும் பணியின் போது சுவர் விழுந்ததில் இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை அண்ணா சாலையில் பழைய கட்டிடம் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
சென்னை ஆயிரம் விளக்கு மசூதி அருகே அண்ணா சாலை பகுதியில் பழைய பயன்படுத்தப்படாத கட்டிடம் இருந்து வந்தது. இதனால் அந்த கட்டிடத்தை ஜேசிபி இயந்திரம் கொண்டு இடிக்கும் பணி இன்று நடைபெற்று வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து விழுந்தது. அந்த வழியாக சென்ற இளம் பெண் மீது சுவர் இடிந்து விழுந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனால் அங்கிருந்த மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் இடிபாடுகளில் சிக்கிய இளம் பெண்ணை சடலமாக மீட்டனர். இதையடுத்து உயிரிழந்த பெண் வங்கி ஊழியர் பிரியா என்பது தெரியவந்தது.
மேலும் 2 பெண்கள் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் கட்டிட இடிப்பு பணியில் ஈடுபட்டதே பெண் உயிரிழப்புக்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்