Minister Raghupathi: பொன்முடி பவர்ஃபுல் துறையில் இருந்து மாற்றப்பட்டதற்கு யார் காரணம்? - அமைச்சர் ரகுபதி விளக்கம்!
ஆளுநருடான மோதல் போக்கை கைவிட்டுக்கு, இணக்கமாக செயல்பட தமிழக அரசு விரும்பியதன் காரணமாகவே, அமைச்சர் பொன்முடியின் துறை மாற்றப்பட்டதாக தகவல் வெளியானது.

தமிழக முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, நாசர், கொறடாவாக இருந்த கோவி செழியன், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகிய நான்கு பேர் சமீபத்தில் அமைச்சரைவையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வனத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி செல்வராஜ் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும், அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு நிதித்துறையுடன், சுற்றுச்சூழல் துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டிருக்கிறது.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் காதி மற்றும் பால்வளத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும், மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், க.ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்த சூழலில், கட்சியிலும், அமைச்சரவையிலும் பெரிய துறை என ஆதிக்கம் செலுத்திவந்த பொன்முடியின் துறை மாற்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. ஆளுநருடான மோதல் போக்கை கைவிட்டுக்கு, இணக்கமாக செயல்பட தமிழக அரசு விரும்பியதன் காரணமாகவே, அமைச்சர் பொன்முடியின் துறை மாற்றப்பட்டதாக தகவல் வெளியானது.