DMK VS ADMK: ’குற்ற வழக்கு தொடர்வுத் துறை இயக்குநராக ஜின்னா நியமனம்!’ விட்டு விளாசும் எடப்பாடி பழனிசாமி!
திமுக தனது இரட்டை வேடத்தை அரங்கேற்றியுள்ளது. ஏற்கெனவே, பல ஆண்டுகளாக இந்த இயக்குநரகத்தில் பணிபுரியும் மூத்த அலுவலர்களுடைய நியாயமான பணி உயர்வு இதனால் பாதிப்படைந்துள்ளது.

குற்ற வழக்கு தொடர்வுத் துறை இயக்குநராக ஹசன் முகமது ஜின்னாவை நியமித்து உள்ளதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
மாநில குற்றவியல் அரசு தலைமை வழக்கறிஞர்
இது தொடர்பாக ‘எக்ஸ்’ சமூகவலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ள இடுகையில், தமிழ்நாட்டின் குற்ற வழக்கு தொடர்வுத் துறை இயக்குநர் (Director of Prosecution) அவர்கள் 31.1.2024 அன்று சுய விருப்பின் அடிப்படையில் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின் தற்போது, மாநில குற்றவியல் அரசு தலைமை வழக்கறிஞர் (State Public Prosecutor) அவர்களை, குற்ற வழக்கு தொடர்வுத் துறை இயக்குநர் பதவியில் இந்த விடியா திமுக அரசு நியமித்துள்ளது.
பதவி உயர்வு மூலம் நியமனம் செய்யப்படுவது மரபு
பொதுவாக முந்தைய குற்றவியல் நடைமுறைச் சட்டங்களின்படி தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட Asst. Prosecutor-ஆக பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் பதவி உயர்வின் மூலம் Director of Prosecution ஆக நியமிக்கப்படுவது மரபு.