Crime : மயிலாடுதுறை பெண் கடத்தப்பட்ட விவகாரம்.. தனக்கு செய்வினை வைத்துவிட்டார்.. கணவர் மீது பெண் பகீர் வாக்குமூலம்!
மயிலாடுதுறை பெண் கடத்தப்பட்ட விவகாரத்தில் உமா மகேஸ்வரியை கடத்திய கணவன் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி. இவர் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்ரி வந்துள்ளார். இதனால், உமாமகேஸ்வரி மயிலாடுதுறை ஆராயத்தெரு அருகில் உள்ள குருக்கள் பண்டாரத் தெருவில் வாடகை வீட்டில் தனது தாய் தனலட்சுமியுடன் தங்கி மயிலாடுதுறை நகராட்சியில் பணியாற்றி வந்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்நிலையில் பல்லவராயன்பத்தை கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடையில் இந்தப்பழக்கம் காதலாக மாறியது. பின்னர் உமா மகேஸ்வரி கடந்த 2022 டிசம்பர் 4ஆம் தேதி தனது தாயின் எதிர்ப்பையும் மீறி வீட்டை விட்டு வெளியேறி அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் கணவருடன் மயிலாடுதுறையில் தனி வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.
திருமணமான நான்கு மாதத்தில் தாய் தனலட்சுமியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட உமா மகேஸ்வரி, தனது கணவர் மாரிமுத்து சைக்கோ போல தன்மீது சந்தேகப்படுகிறார். தன்னை அடித்து சித்ரவதை செய்கிறார் என அழுதபடி தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அங்கு சென்ற உறவினர்கள் உமா மகேஸ்வரியை அவரது கணவர் மாரிமுத்துவிடம் இருந்து பிரித்து அழைத்து வந்து தாய் தனலட்சுமியிடம் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில், கடந்த ஜூன் 20ஆம் தேதி இரவு 7 மணியளவில் காரில் சில நபர்களுடன் வந்த மாரிமுத்து, ஆராயத்தெரு என்ற இடத்தில் தாயாருடன் சாலையில் நடந்து சென்ற உமாமகேஸ்வரியை வழிமறித்து, அவரை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளனர். இது குறித்து தனலட்சுமி அன்று இரவு மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அளித்து சுமார் 1 மாதமாகிய நிலையில், இதுவரை தனது மகள் குறித்த எந்த தகவலும் கிடைக்காததால், இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில் மகேஸ்வரி தான் சென்னையில் உள்ளதாக தாயாருக்கு தகவல் அளித்ததன் பேரில் மயிலாடுதுறை போலீசார் உமாமகேஸ்வரியை மீட்டு மயிலாடுதுறை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்தனர். இந்நிலையில், போலீசாரிடம் உமாமகேஸ்வரி அளித்துள்ள வாக்குமூலத்தில், தன்னை காரில் கடத்திய கணவன் மாரிமுத்து, மயக்க மருந்து கொடுத்து மயக்கமடைய செய்தார். தொடர்ந்து ராமநாதபுரம் அழைத்து சென்று தனக்கு செய்வினை வைத்துவிட்டதாக தெவித்தார்.
மேலும் அங்கு தர்கா ஒன்றில் மாந்திரீகம் செய்தார். பின்னர் சென்னை அழைத்து சென்று தர்காவில் பைத்தியம் பிடித்துவிட்டது என்று கோடங்கி பூஜை செய்தார். அவருடன் வாழ மறுத்ததால் சென்னையில் நடுரோட்டில் விட்டு விட்டு சென்றுவிட்டார் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று மயிலாடுதுறை நீதிமன்றத்தில் அவர் ஆஜர் படுத்தப்படுகிறார். உமா மகேஸ்வரியை கடத்திய கணவன் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்