’சொத்து குவிப்பு வழக்கு! ’2 அமைச்சர்களை விடுவித்தது செல்லாது!’ நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி தீர்ப்பு!
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோரை விடுவித்த உத்தரவை ரத்து செய்வதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டு உள்ளார்.

’சொத்து குவிப்பு வழக்கு! ’2 அமைச்சர்களை விடுவித்தது செல்லாது!’ நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பு!
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோரை விடுவித்த உத்தரவை ரத்து செய்வதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டு உள்ளார்.
வரும் செப்டம்பர் 11ஆம் தேதி விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ள நீதிபதி, தினசரி அடிப்படையில் விசாரித்து சொத்து குவிப்பு வழக்கு விசாரணை முடிக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் நிதி, மனிதவள மேலாண்மை, மின்சாரம் ஆகிய துறைகளின் அமைச்சராக உள்ளவர் தங்கம் தென்னரசு. இவர் கடந்த 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை நடைபெற்ற மறைந்த முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையிலும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து இருந்தார்.