Kallakurichi: ’கள்ளுக்கடை திறக்கும் அவசியம் இல்லை! கள்ளச்சாரய மரணத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை’ போட்டு உடைத்த ரகுபதி!
Kallakurichi Hooch Tragedy: கள்ளகுறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரத்தில் அரசு வெளிப்படையாக செயல்படுவதால் சிபிஐ விசாரணை தேவை இல்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி

கள்ளுக்கடைகளை திறப்பதற்கான அவசியம் ஏதும் இல்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்து உள்ளார்.
அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பு
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கள்ளக்குறிச்சியில் மெத்தனால் எனும் ரசாய கலவையை குடித்து இறந்துள்ளது வருந்ததக்கது, விரும்பத்தகாதது. 40 தொகுதிகளிலும் தோல்வி அடைந்ததால், மக்கள் மன்றத்தில் தோல்வி அடைந்துவிட்டோம், சட்டமன்றத்தில் ஏதாவது பிரச்னைகளை கிளப்ப வேண்டும் என்பதற்காக, சட்டமன்றத்தில் இல்லாத குற்றச்சாட்டுக்களை கூறி உள்ளார்.
சட்டப்பேரவையில் நடந்தது என்ன?
முதலமைச்சர் பேச வாய்ப்பு தரவில்லை என்று சொல்கிறார். அதிமுக வெளிநடப்பு செய்த பிறகு, அதிமுகவினருக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று முதலமைச்சர் பேசினார். கேள்வி நேரத்தில் பிரச்னைகளை எழுப்பமாட்டார்கள். வேண்டுமென்றே சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு உள்ளனர். அப்போது எதிர்கட்சித் தலைவர் பேச சபாநாயகர் வாய்ப்பு தந்தார்.