Cauvery water issue: 'தண்ணீர் தர முடியாதா!’ அனைத்து கட்சி கூட்டத்தில் கர்நாடகாவை விளாசிய முதல்வர் ஸ்டாலின்!
Cauvery water issue: தமிழ்நாட்டிற்கு காவிரி நீரைத் தர முடியாது என்று மறுத்துள்ள கர்நாடக அரசிற்கு இந்த அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டம் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது

காவிரி நீரை தரமறுத்த கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்து அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
தினமும் ஒரு டிஎம்சி காவிரி நீரை தமிழகத்திற்கு தர காவிரி நீர் ஒழுங்காற்று வாரியம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக அரசு, தமிழ்நாட்டுக்கு 8 ஆயிரம் கன அடி நீரை மட்டுமே தர முடியும் என கூறி உள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம்
இந்த நிலையில் காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக்கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவிரி நதி நீர்ப் பிரச்சினையில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடும் வகையில் நடைபெறும் இந்த அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அவர்களே, சட்டமன்ற அனைத்துக் கட்சி தலைவர்களே, தலைமைச் செயலாளர் அவர்களே, அரசுச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்களே, உங்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.