‘மத நம்பிக்கைகளுக்கு நாங்கள் தடை இல்லை’ பழனி முருகன் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கைகள் இருக்கும். அதில் உயர்வு தாழ்வு இல்லை. அந்த நம்பிக்கைகளுக்கு திராவிட மாடல் அரசு எப்போதும் தடையாக இருந்தது இல்லை. அதுமட்டுமல்ல,அனைவரது நம்பிக்கைக்கும் நன்மை செய்து தரக்கூடிய அரசாகவும் செயல்பட்டு வருகிறது

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது; திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. நானும் பல நிகழ்ச்சிகளில் பங்கெடுத்திருக்கிறேன். அந்த வரிசையில், பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தலைவர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் நடந்த மக்கள் பணிகளை பார்த்து தவத்திரு குன்றக்குடி அடிகளாரும்,திருமுருக கிருபானந்த வாரியாரும் பாராட்டினார்கள். இன்றைய ஆட்சியை நீங்கள் எல்லோரும் பாராட்டிக் கொண்டிருக்கிறீர்கள். அதன் அடையாளம்தான், பழனியில் நீங்கள் எல்லோரும் கூடி இருப்பது. அந்த வகையில்,பக்தர்கள் உட்பட அனைவரும் விரும்பும் ஆட்சியாக கழக ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்த மாநாடுஏற்பாடு செய்யப்பட்டவுடனே, அறநிலையத்துறை சார்பாக செய்யப்பட்டு வருகின்ற பணிகளின் பட்டியலை தரச் சொல்லி, அமைச்சர் சேகர்பாபுவிடம் கேட்டேன். அதில் அவர் குறிப்பிட்டிருந்த பணிகளில் சிலவற்றை இங்கே குறிப்பிட்டால் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
பட்டியலிட்ட முதல்வர்
- பழனி,திருத்தணி,திருச்செந்தூர்,மருதமலை,குமாரவயலூர்,சிறுவாபுரி,காந்தல் ஆகிய ஏழு முருகன் திருக்கோயில்களில் பெருந்திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
- பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வருகிற பக்தர்கள் எண்ணிக்கை,நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால்,பக்தர்கள் நலனை மனதில் வைத்து,கோயில் வளர்ச்சிப் பணிகளை தொடங்கி இருக்கிறோம். வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக58.77ஏக்கர் நிலங்களை58கோடியே54 இலட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கி கையகப்படுத்துகின்ற பணிகள் நடைபெற்று வருகிறது.
- அறுபடை வீடு முருகன் திருக்கோயில்களில்789கோடியே85 இலட்சம்ரூபாய் மதிப்பீட்டில்251பணிகள் நடைபெற்று வருகிறது.
- அறுபடை வீடு அல்லாத முருகன் திருக்கோயில்களில்277கோடியே27 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில்588பணிகள் நடைபெற்று வருகிறது.
- 69முருகன் திருக்கோயில்களின் திருப்பணிகளை முடித்து குடமுழுக்கு விழா நடத்தப்பட்டிருக்கிறது.
- பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் நடத்துகின்ற கல்வி நிறுவனங்களில் படிக்கின்ற4000மாணவ, மாணவிகளுக்கு கட்டணமில்லாத காலைச் சிற்றுண்டி வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு மதிய உணவும் வழங்கப்பட இருக்கிறது.
- பழனி திருக்கோயிலுக்கு தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் திருவிழாக்களுக்கு பாதயாத்திரை வருகின்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
- பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பணிபுரிந்து ஓய்வு பெற்று, துறை நிலையிலான ஓய்வூதியம் வாங்குகிற258ஓய்வூதியதாரர்களுக்கு நபர் ஒருவருக்கு ஓய்வூதியம்3000ரூபாய் என்று வழங்கப்பட்டு வந்ததை4000ரூபாயாக உயர்த்தியும், 54குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு நபர் ஒருவருக்கு1500ரூபாய் வழங்கப்பட்டதை2000ரூபாயாக உயர்த்தியும் வழங்கிக் கொண்டிருக்கிறோம்.
- 2024-ஆம் ஆண்டு அறுபடை வீடு ஆன்மீக சுற்றுப்பயணத்துக்கு1000பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து,இதுநாள் வரை813நபர்கள் பயனடைந்திருக்கிறார்கள்.
- அனைத்து திருக்கோயில்களிலும் பக்தர்களுக்கு கட்டணமில்லாத முடி காணிக்கை செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும்,முடி காணிக்கை பணியாளர்களுக்கு மாதம்5000ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
- தவில்,நாதஸ்வரக் கல்லுாரி,அர்ச்சகர் மற்றும் வேத ஆகம பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகையாக3000ரூபாய் வழங்கப்பட்டு வந்ததை24.11.2023முதல்4000ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
- பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் தொடர்ந்து5ஆண்டுகள் பணிபுரிந்த13பணியாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தத் திருக்கோயிலில் பணிபுரிந்து பணிக்காலத்தில் மறைவெய்திய பணியாளர்களின் வாரிசுதாரர்கள்8நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணை வழங்கப்பட்டிருக்கிறது.
- இதுவரை,திருக்கோயில்களில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வந்த1,298பணியாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டிருக்கிறார்கள். 111பணியாளர்கள் கருணை அடிப்படையில் பணிநியமனம் செய்யப்பட்டிருக்கார்கள்.
- திருக்கோயில் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல்,ஊக்கத்தொகை உயர்வு செய்தல்,தினக்கூலி மற்றும் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிந்த1,298பணியாளர்களுக்கு பணிநிரந்தரம் வழங்கப்பட்டது. ஓய்வூதியதாரர்களுக்கு தொகை உயர்வும் வழங்கப்பட்டிருக்கிறது.
நம்பிக்கைகளுக்கு எப்போதும் தடையில்லை
இப்படி வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம். ஏதோ திடீர் என்று பழனியில் மாநாடு நடத்தவில்லை; இப்படிப்பட்ட பணிகளை எல்லாம் செய்து கொண்டுதான் பழனியில் இந்த மாநாட்டை இந்து சமய அறநிலையத்துறை நடத்துகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கைகள் இருக்கும். அதில் உயர்வு தாழ்வு இல்லை. அந்த நம்பிக்கைகளுக்கு திராவிட மாடல் அரசு எப்போதும் தடையாக இருந்தது இல்லை. அதுமட்டுமல்ல,அனைவரது நம்பிக்கைக்கும் நன்மை செய்து தரக்கூடிய அரசாகவும் செயல்பட்டு வருகிறது.