Tamil Puthalvan Scheme: இனி மாணவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரெடி! தமிழ் புதல்வன் திட்டத்தை முதலமைச்சர்தொடங்கி வைத்தார்!
Tamil Puthalvan Scheme: இத்திட்டத்தின் வாயிலாக, அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும்பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுக் கல்லூரிகளில் சேரும் ஏறத்தாழ 3 இலட்சத்து 28 ஆயிரம் கல்லூரி மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1,000/- பெற்றுப் பயன் அடைவார்கள்.

அரசு பள்ளி மாணவிகளை போலவே அரசு பள்ளி மாணவர்களுக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்கும் ’தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் தொடங்கி வைத்தார்.
மனதிற்கு நெருக்கமான திட்டம்
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”வரலாற்றில் ஒரு சில திட்டங்கள்தான் நமது மனதிற்கு நெருக்கமான திட்டங்களாக இருக்கும். அப்படிப்பட்ட திட்டமாக தமிழ் புதல்வன் திட்டம் உருவாகி உள்ளது. இந்த திட்டத்தை தொடங்கி வைக்க நான் கோவை மண்டலத்தை தேர்வு செய்து உள்ளேன். இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களை உள்ள பகுதியாக உள்ளது. தமிழ்நாடுதான் இந்தியாவுக்கு முன்னோடி மாநிலம் என்று சொல்லும் அளவுக்கு நல்ல திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம்” என முதலமைச்சர் கூறினார்.
3.28 லட்சம் மாணவர்கள் பலன் அடைவார்கள்
இத்திட்டத்தின் வாயிலாக, அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும்பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுக் கல்லூரிகளில் சேரும் ஏறத்தாழ 3 இலட்சத்து 28 ஆயிரம் கல்லூரி மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1,000/- பெற்றுப் பயன் அடைவார்கள்.