காத்திருந்த எச்.ராஜா..அண்ணாமலை இல்லாமல் தொடங்கிய பாஜக நிர்வாகிகள் கூட்டம்!
TN BJP: பாஜக நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இல்லாமல் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக சமீபத்தில் பகிரங்கமாக அறிவித்தது. இதையடுத்து பாஜக தேசியத் தலைமை அழைப்பின் பேரில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஞாயிற்றுக்கிழமை டெல்லி சென்றார். அங்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனை சந்தித்து பேசினார். இதனால், அண்ணாமலை தலைமையில் சென்னையில் அக்டோபர் 3 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
ட்ரெண்டிங் செய்திகள்
இதையடுத்து, இன்று (அக்.05) காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று காலை தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்தில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் வருகை தந்திருந்தனர். ஆனால், மாநில தலைவர் அண்ணாமலை வருவதற்குள் கூட்டம் தொடங்கியுள்ளது.
தமிழக பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், மூத்த நிர்வாகி எச்.ராஜா ஆகியோர் நீண்ட நேரமாக மேடையில் அமர்ந்திருந்தனர். அண்ணாமலை வரும் முன்பே வந்தே மாதரம் பாடல் பாடி கூட்டம் தொடங்கப்பட்டது. அண்ணாமலை இல்லாமல் பெருங்கோட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. பாஜக மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் கூட்டம் அண்ணாமலை இல்லாமலயே தொடங்கியது. மாவட்ட தலைவர்கள் கூட்டத்திற்கு அண்ணாமலை இன்னும் வராததால் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது. இதனால் அண்ணாமலை புறக்கணிக்கப்படுவதாக பாஜகவினர் மத்தியில் பரவலாக பேச்சு அடிபட்டு வருகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்