Armstrong Murder Case : ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய போகிறார்கள் என்ற திட்டம் தெரிந்தே பண உதவி - அஞ்சலை பகீர் வாக்குமூலம்!
Armstrong Murder Case : ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த கும்பல், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்யப் போகிறார்கள் என்ற திட்டம் தெரிந்தே பண உதவி செய்ததாக அஞ்சலை வாக்குமூலம் அளித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவ்ர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலையை தனிப்படை போலீசார் நேற்று இரவு புளியந்தோப்பில் கைது செய்தனர். இந்த கொலைக்கு தொடர்பு இருப்பதை தொடர்ந்து பாஜக அவரை கட்சியில் இருந்து நீக்கியது. அஞ்சலையை தொடந்த்து மேலும் இரண்டு ரவுடிகளை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அஞ்சலை வாக்குமூலம்
ஆம்ஸ்ட்ராங்கொலை சம்பவத்தி கைது செய்யப்பட்ட அஞ்சலையிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 2 வங்கி கணக்குகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். அஞ்சலை கொலை கும்பலுக்கு பண உதவி செய்த நிலையில், அவருடைய வங்கி கணக்குகளை காவல்துறையினர் ஆய்வு செய்கின்றனர்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த கும்பல், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்யப் போகிறார்கள் என்ற திட்டம் தெரிந்தே பண உதவி செய்ததாக அஞ்சலை வாக்குமூலம் அளித்துள்ளார்.