அண்ணா நினைவு நாள்: ‘திமுக பேரணி.. அதிமுக அஞ்சலி’ பேரறிஞருக்கு மரியாதை!
பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
முன்னாள் முதல்வர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 54-ஆவது நினைவு நாளையொட்டி தமிழகத்தில் முக்கிய அரசியல் கட்சிகள் அவருக்கு அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் சென்னை வாலாஜ சாலையில் உள்ள அண்ணா சிலையிலிருந்து, காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிடம் வரை பேரணியாக சென்ற திமுகவினர், அண்ணாவிற்கு மாலை அணிவித்துஅஞ்சலி செலுத்தினர். மூத்த அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் இந்த பேரணியில் பங்கேற்றனர்.
அதே போல காலை 10 மணியளவில், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்திற்கு வந்த அதிமுக இடைக்காலப்பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவினர், அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர். இந்நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.
இதைப் போல் இன்னும் பல அரசியல் கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பலரும் அண்ணாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
டாபிக்ஸ்