Selvaperunthagai : இதுதான் கடைசி எச்சரிக்கை.. அரைவேக்காடாக அரசியல் பண்ணும் அண்ணாமலை - செல்வப்பெருந்தகை ஆவேசம்!
நான் ரவுடி என்று நிரூபிக்க முடியுமா ? வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தால் அண்ணாமலைக்கு முன் ஜாமீன் கிடைக்குமா? அண்ணாமலை மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடருவேன் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை ரவுடி என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார். இதற்கு நான் ரவுடி என்று நிரூபிக்க முடியுமா ? வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தால் அண்ணாமலைக்கு முன் ஜாமீன் கிடைக்குமா? அண்ணாமலை மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடருவேன் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்திபவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் அண்ணாமலை, எல்லா அரசியல் கட்சித் தலைவர்களையும் பிளாக்மெயில் செய்து வருகிறார். அருவருப்பான அரசியல் செய்து வருகிறார்.
நான் ரவுடி என்று நிரூபிக்க முடியுமா?
என்னை ரவுடி என்று அண்ணாமலை கூறி இருக்கிறார். நான் ரவுடி என்று நிரூபிக்க முடியுமா? அண்ணாமலை ஐ.பி.எஸ் படித்தாரா? என்ற சந்தேகம் எனக்கு வருகிறது. உண்மைக்கு புறம்பாக பேசினால் என்ன வழக்கு வரும் என்று அண்ணாமலைக்கு தெரியுமா?