Top 10 News : சென்னையில் காற்றின் தரம் மோசமடைந்தது.. மின்சாரம் பாய்ந்து எஸ்.ஐ பலி.. இன்றைய முக்கிய செய்திகள்!
Top 10 Tamil Nadu : சென்னையில் காற்றின் தரம் மோசமடைந்தது, மின்சாரம் பாய்ந்து எஸ்.ஐ சரவணன் உயிரிழப்பு, சென்னை விமான நிலையத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் என இன்றைய டாப் 10 செய்திகளை பார்க்கலாம்.

அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ஆகிய 4 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் கடலூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஆகிய ஐந்து மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
மின்சாரம் பாய்ந்து எஸ்.ஐ சரவணன் உயிரிழப்பு
ராமநாதபுரம் பரமக்குடி அருகே மின்சாரம் தாக்கி காவல் உதவி ஆய்வாளர் சரவணன் (36) உயிரிழந்துள்ளார். முத்துராமலிங்க தேவர் குருபூஜையை ஒட்டி பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பங்களை அகற்றும்போது, மின் கம்பியில் கொடிக்கம்பம் பட்டதில் மின்சாரம் பாய்ந்து பரமக்குடி எஸ்.ஐ சரவணன் உயிரிழந்துள்ளார்.
சென்னை விமான நிலையத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
சென்னைக்கு வரும் 11 விமானங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, சென்னை விமான நிலையத்துக்கு மீண்டும் இமெயில் வந்ததால் பரபரப்புஏற்பட்டது. சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு வந்த இமெயிலில், ``சென்னைக்கு வரும் இலங்கை, மும்பை, பெங்களூர், சிலிகுரி, டெல்லி,கொல்கத்தா உள்ளிட்ட 8 ஏர் இந்தியாவிமானங்கள் மற்றும் கோவா, புனே, ஐதராபாத் ஆகிய 3 இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் என மொத்தம்11 விமானங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.