Top 10 Tamil Nadu:அஜித்துக்கு வாழ்த்து சொன்ன உதயநிதியை விமர்சித்த தமிழிசை முதல் சீமானுக்கு எதிராக பசும்பொன்னில் முழக்கம்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 Tamil Nadu:அஜித்துக்கு வாழ்த்து சொன்ன உதயநிதியை விமர்சித்த தமிழிசை முதல் சீமானுக்கு எதிராக பசும்பொன்னில் முழக்கம்

Top 10 Tamil Nadu:அஜித்துக்கு வாழ்த்து சொன்ன உதயநிதியை விமர்சித்த தமிழிசை முதல் சீமானுக்கு எதிராக பசும்பொன்னில் முழக்கம்

Suguna Devi P HT Tamil
Updated Oct 30, 2024 10:43 PM IST

அக்டோபர் மாதம் 30 ஆம் தேதியான இன்று இரவு வரை தமிழகத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை இன்றைய டாப் 10 செய்திகளாக இங்கு பார்க்கலாம்.

Top 10 Tamil Nadu:ஜித்துக்கு வாழ்த்து சொன்ன உதயநிதியை விமர்சித்த தமிழிசை முதல் சீமானுக்கு எதிராக பசும்பொன்னில் முழக்கம்!
Top 10 Tamil Nadu:ஜித்துக்கு வாழ்த்து சொன்ன உதயநிதியை விமர்சித்த தமிழிசை முதல் சீமானுக்கு எதிராக பசும்பொன்னில் முழக்கம்!

தீபாவளி எதிரொலி - அதிகரித்த பூக்கள் விலை 

தீபாவளி பண்டிகையை ஒட்டி பூசந்தைகளில் பூக்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி பிச்சிப்பூ கிலோ ரூ.1250க்கும், மல்லிகைப்பூ கிலோ ரூ.1500க்கும், அரளிப்பூ கிலோ ரூ.250க்கும், வாடாமல்லி கிலோ ரூ.20க்கும், கேந்தி பூக்கள் கிலோ ரூ.100க்கும், சம்பங்கி கிலோ ரூ.500க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.600க்கும், ரோஸ் கிலோ ரூ.250க்கும் விற்பனையாகிறது.

பசும்பொன்னில் சீமானுக்கு எதிராக முழக்கம் 

பசும்பொனில் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்துவதற்காக சென்ற நாம் தமிழர் கட்சி சீமானை சீமானுக்கு எதிராக இளைஞர்கள் பலர் கோசமிட்டனர். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அனைவரையும் பாண்டியர்கள் என குறிப்பிடுவதால் ஆத்திரமடைந்து கத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

நிரம்பி வழியும் சென்னை 

தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் உள்ள முக்கிய இடங்களில் கூட்டம் நிரம்பி வழிய்துள்ளது சென்னை திநகர் கடை வீதிகளில் மக்கள் வெள்ளம் பெருக்கெடுத்து உள்ளது. மேலும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பயணிகள் சொந்த ஊருக்கு செல்வதற்காக கூட்டம் கூட்டமாக சென்றனர். 

தேவர் ஜெயந்திக்கு தலைவர்கள் மரியாதை 

முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுவதை அளித்து முக்கிய அரசியல் தலைவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன்னிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சீமான், எடப்பாடி பழனிசாமி உட்பட பல தலைவர்கள் சென்று மரியாதை செலுத்தினர் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முத்துராமலிங்க தேவரின் புகைப்படத்திற்கு மலர் அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் அவரது எக்ஸ்தளத்திலும் தேவர் ஜெயந்திக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

சென்னையில் கொட்டித் தீர்த்த மழை 

சென்னையில் இன்று அம்பத்தூர் கொரட்டூர் உட்பட பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. மேலும் இதன் காரணமாக தெருக்களிலும், சாலைகளிலும் சாக்கடை கழிவுநீருடன் மழை நீரும் கலந்து தேங்கி காணப்பட்ட.து குறிப்பிடத்தக்க வகையில் அண்ணா நகரில் ஒரு மணி நேரத்தில் 9 சென்டிமீட்டர் அளவுள்ள mazamazai பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திடீரென கொட்டி தீர்த்த மழையால் சென்னைவாசிகள் அவதிக்குள்ளாகினர்.

நடிகர் சங்கத்தின் பதில் 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் வரும் நவம்பர் 1 முதல் புதிய படங்களின் படப்பிடிப்பு தொடங்கக்கூடாது என அறிக்கை வெளியானது. மேலும் இதற்கு நடிகர் சங்கம் பதில் அளித்துள்ளது. அதில், 'படப்பிடிப்பு பணிகளை முடக்குவதாக அறிவிப்பு வெளியானது குழப்பத்தை விளைவிக்கிறது. தன்னிச்சையான முடிவால் மிகப் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகப் போவது தமிழ்த் திரைத்துறை தொழிலாளிகள் மட்டுமல்ல. முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களுக்கும் பெரும் இழப்பையே ஏற்படுத்தும் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.வேலை நிறுத்தம் போன்ற அவசியமற்ற முடிவு, சிலரால் இடப்படும் முட்டுக்கட்டையாகவே கருதப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரயில்களின் நேரம் மாற்றம் 

இன்று தாம்பரத்தில் இருந்து புறப்படும் இரண்டு இரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து நாகர்கோயிளுக்கு செல்லும் 11 மணி இரயில் 12 மணிக்கு புறப்பட உள்ளது. தாம்பரத்தில் இருந்து மங்களூரு செல்லும் ரயில் 11:50 மணிக்கு பதிலாக 12:50 மணிக்கு புறப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 

அவசர கால மேலாண்மை மையத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு 

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் இயங்கும் 108 அவசர கால மேலாண்மை மையத்தில் இன்று துணை முதலமைச்சர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். வழக்கமான நாட்களில் 12 ஆயிரம் அவசர கால அழைப்புகள் வரை கையாளப்படும் நிலையில், தீபாவளியையொட்டி அந்த எண்ணிக்கை 20 ஆயிரத்தை எட்டக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அதற்கேற்ப கூடுதல் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு, முழுவீச்சில் பணியாற்றி வருகின்றனர் எனத் தெரிவித்தார். 

 தமிழிசைக்கு உதயநிதி பதிலடி 

உதயநிதி நடிகர் அஜித்தின் ரேஸ்கார் பந்தயத்திற்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார். இந்த வாழ்த்தை குறிப்பிட்டு தமிழிசை சௌந்தர்ராஜன் நடிகர் விஜயை கோபப்படுத்துவதற்காகவே உதயநிதி இந்த வாழ்த்தை தெரிவித்துள்ளதாக கூறியிருந்தார். இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி தமிழிசை இவ்வாறு கூறினார் என்ற கேள்விக்கு அவர் போல் எனக்கும் வேலை இல்லை என்று நினைத்து உள்ளார்களா? எனக் கூறி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.