தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  20 Percent Increase In Moisture Content Of Paddy Procurement Central Govt

Chennai: நெல் கொள்முதல் ஈரப்பதம் 20 சதவிகிதம் உயர்வு -மத்திய அரசு அனுமதி

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 23, 2023 02:01 PM IST

20% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யலாம் என தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழகத்தில் பிப்ரவரி மாதத்தில் நெல் அறுவடை செய்யத் தயாராக இருந்த நேரத்தில், தூரதிஷ்டவசமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பெய்த பருவம் தவறிய மழையால் சுமார் ஒரு லட்சம் ஹெக்டேர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் நெல் கொள்முதலில் செய்வதில் உரிய தளர்வுகள் வழங்க கோரி முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில்

தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள், பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கியுள்ள காரணத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தணித்திடும் வகையில் நெல் கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை வழங்க வேண்டும்

காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால்களை துரிதமாக தூர்வாருதல், மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறந்துவிடுதல் விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு வழங்குதல் போன்ற தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் நெல் சாகுபடி பரப்பு அதிகரித்து, குறுவை பருவத்தில் 4.19 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்து சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது என்றும், மாநிலத்தில் 16.43 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு சம்பா/ நவரை பயிரின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாதத்தில் நெல் அறுவடை செய்யத் தயாராக இருந்த நேரத்தில், தூரதிஷ்டவசமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பெய்த பருவம் தவறிய மழையால் சுமார் ஒரு லட்சம் ஹெக்டேர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன என்று ஆரம்ப மதிப்பீட்டின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றி, அறுவடை பணியை மீண்டும் தொடங்க தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுத்துவரும் நிலையில், தொடர்ந்து பலத்த மழை பெய்வதால் அறுவடை செய்யப்பட்ட தானியத்தில் ஈரப்பத அளவு மிக அதிகமாக இருக்கும் என விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். 

கடந்த காலங்களில் குறுவை பருவத்தில், பரவலாக்கப்பட்ட கொள்முதல் திட்டத்தின்கீழ், மாநில கொள்முதல் முகமையான தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் வேண்டுகோளின் அடிப்படையில், நெல் கொள்முதலில் ஈரப்பதம் குறித்த விதிமுறைகளைத் தளர்த்த மத்திய அரசு அனுமதி அளித்ததை சுட்டிக்காட்டியுள்ளர். பருவம் தவறிய இந்த மழையின் தற்போதைய சூழ்நிலையில், கொள்முதல் ஈரப்பதத்தில் அதேபோன்ற தளர்வு தேவைப்படுகிறது என்றும், அதன்மூலம் நெல் கொள்முதல் பணிகளை சீராக செய்து முடிக்க இயலும்.

எனவே, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 22% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய அனுமதிக்கவும், முதிர்ச்சியடையாத நெல்லின் குறைந்தபட்ச வரம்பை 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் வரை தளர்த்தவும், சேதமடைந்த, நிறமாற்றம் மற்றும் முளைத்த நெல்லை 5 சதவீதத்திலிருந்து 7 சதவீதம் வரை தளர்த்தவும், தேவையான மதிப்பை இந்த சம்பா பயிருக்கும் குறைக்கவும் உத்தரவிடவேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் 20% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யலாம் என தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே மார்ச் வரை 19 சதவிகிதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி வழங்கி இருந்த நிலையில் தற்போது ஒரு சதவிகிதம் உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்