Paris Olympics: ‘பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான அமெரிக்க கூடைப்பந்து அணியில் இடம்பிடிப்பேன்’-முன்னணி வீராங்கனை நம்பிக்கை
Paris Olympics: மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நால்வரில் இருந்து இந்த முறை தேர்வு முகாமுக்குத் திரும்பிய ஒரே வீராங்கனை இவர்தான். இவர் இந்த முறை பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க கூடைப்பந்து வீராங்கனை அலிசா கிரே(AP Photo/Jeff Roberson, File) (AP)
இந்த கோடையில் பாரிஸ் ஒலிம்பிக்கில் அணியின் உறுப்பினராக இருக்க வேண்டும் என்று விரும்புவதாக யுஎஸ்ஏ கூடைப்பந்தாட்ட வீராங்கனை அலிஷா கிரே தெரிவித்துள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நால்வரில் இருந்து இந்த முறை தேர்வு முகாமுக்குத் திரும்பிய ஒரே வீராங்கனை இவர்தான். இவர் இந்த முறை பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாசசூசெட்ஸின் ஸ்பிரிங்ஃபீல்டில் தி நைஸ்மித் கூடைப்பந்து ஹால் ஆஃப் ஃபேமில் 3x3 போட்டியில் பங்கேற்க வார இறுதியில் 15 பேர் கொண்ட பயிற்சி முகாமில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு பிளேயர்களில் கிரேவும் ஒருவர். அவர் டீரிகா ஹாம்பி, கேமரூன் பிரிங்க் மற்றும் லின்னே ஹார்பர் ஆகியோருடன் ஒரு அணியில் உள்ளார்.