தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  ’வைரல் ஆன வைலேஷன் வீடியோ’ நடு ரோட்டுல இப்படியா பண்ணுவாங்க.. யூடியுபர் கைது…

’வைரல் ஆன வைலேஷன் வீடியோ’ நடு ரோட்டுல இப்படியா பண்ணுவாங்க.. யூடியுபர் கைது…

Priyadarshini R HT Tamil
Mar 17, 2023 11:32 AM IST

Youtuber Arrest : யூடியுபர் பிரின்ஸ் தீக்ஷித் என்ஹெச் 24ல் கார் பேரணி நடத்தில் அதன் மேலே நின்றுகொண்டு போக்குவரத்து விதிகளை மீறி பிறந்தநாள் கொண்டாடியதால், டெல்லி போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

கைதான யூடியுபர் பிரின்ஸ்
கைதான யூடியுபர் பிரின்ஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

டெல்லி போலீசார், நேற்று இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து அவரை கைது செய்துள்ளனர். மேலும் அந்த வீடியோவில் சிலர் காரின் கூரையில் ஏறி ஆபத்தான நிலையில் நிற்கிறார்கள். டெல்லியின் பாண்டவா நகரில் என்ஹெச் 24ல் இந்தச்சம்பவம் நடைபெற்றுள்ளது. அதில் இருப்பவர்கள் யூடியுபர் பிரின்ஸ் தீக்ஷித்தின் பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். இதையடுத்து பிரின்ஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இதுபோன்ற விவகாரங்கள் நடக்காத வண்ணம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் நடந்த நேரம் மற்றும் அதில் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி போலீசார் டிவிட்டரில் தெரிவித்துள்ளனர்.

இப்போது இந்த வீடியோ வைரல் ஆனாலும், கடந்தாண்டு நவம்பர் மாதமே பிரின்ஸ் திக்ஷித்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. அதில், அதிவேகத்தில் பறக்கக்கூடிய கார் செல்லும்போதே அந்த யூடியுபரும் அவரது நண்பர்களும், கார் சீட்டுகளிலிருந்து மேலே ஏறி நிற்கிறார்கள். பின்னணியில் பேரிரைச்சலுடன் இசை ஒலிக்கப்படுகிறது.

டெல்லி போலீசார், நேற்று இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து அவரை கைது செய்துள்ளனர். மேலும் அந்த வீடியோவில் சிலர் காரின் கூரையில் ஏறி ஆபத்தான நிலையில் நிற்கிறார்கள். டெல்லியின் பாண்டவா நகரில் என்ஹெச் 24ல் இந்தச்சம்பவம் நடைபெற்றுள்ளது. அதில் இருப்பவர்கள் யூடியுபர் பிரின்ஸ் தீக்ஷித்தின் பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். இதையடுத்து பிரின்ஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

மேலும் இதில் சம்மந்தப்பட்டுள்ள பிரின்சின் நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அண்மையில் யூடியுபர்கள் ஜோர்வார் சிங் கல்சி மற்றும் குர்பீரீத் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஓடிக்கொண்டிருக்கும் பலினோ காரில் இருந்து கோல்ப் கோர்ஸ் சாலையில் ரூபாய் நோட்டுக்களை வீசினார்கள். அது ஃபார்சி என்ற வெப் சீரிசின் காட்சி மறு உருவாக்கம் செய்யப்பட்டது. அது சமூகவலைதளங்களில் வைரல் ஆனது. அந்த ரூபாய் நோட்டுகளில் மனோரஞ்சன் பேங்க் ஆப் இந்தியா என்று எழுதப்பட்டிருந்தது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்