Crime: சட்ட விரோதமாக துப்பாக்கி விற்பனை: 3 பேர் கைது
Uttar Pradesh: அவர்களிடமிருந்து இரண்டு சட்டவிரோத கைத் துப்பாக்கிகள், 8 வெற்று கைத்துப்பாக்கிகள், ஒரு பைக் மற்றும் ஸ்கூட்டர் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.
உத்தரபிரதேச மாநிலம் ஹபூரை சேர்ந்த பாபு வாசிம் கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
அவர்கள் டெல்லி என்சிஆர் பகுதியில் சட்டவிரோத துப்பாக்கிகளை சப்ளை செய்து வந்தனர். டெல்லியில் நடந்த சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் போலீஸ்காரரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட ஷாருக்கிற்கு பிஸ்டல் சப்ளை செய்ததும் இதே கும்பல்தான் என்பது விசாரணையில் தெரியவந்தது.
ஜனவரி 31 அன்று, வடகிழக்கு டெல்லி கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஷாருக் பதானுக்கு சட்டவிரோத ஆயுதம் வழங்கியதாக பாபு வாசிம் கும்பலின் தலைவரான பாபு வாசிம் டெல்லியின் கர்கார்டூமா நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
உத்தரப் பிரதேச மாநிலம், ஹபூரை சேர்ந்த பாபு வாசிம் கும்பலை சேர்ந்த மூவரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து இரண்டு சட்டவிரோத கைத் துப்பாக்கிகள், 8 வெற்று கைத்துப்பாக்கிகள், ஒரு பைக் மற்றும் ஸ்கூட்டர் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் சட்டவிரோத கைத்துப்பாக்கிகளை விற்று லாபம் ஈட்டி வந்தனர். சட்டவிரோத கைத்துப்பாக்கிகள் ரூ. 50,000- ரூ.1,00,000 வரையும் அவர்கள் விற்று வந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் வசிப்பவர்களான மோனு, இத்ரிஸ் மற்றும் நயீம் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் டெல்லி என்சிஆர் பகுதியில் சட்டவிரோத துப்பாக்கிகளை சப்ளை செய்து வந்தனர். டெல்லியில் சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தின் போது போலீஸ்காரரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட ஷாருக்கிற்கு பிஸ்டல் சப்ளை செய்ததும் இதே கும்பல்தான் என்பது விசாரணையில் தெரியவந்ததாக ஹாபூர் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் வர்மா தெரிவித்தார்.
டாபிக்ஸ்