தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Fire Crackers: ‘பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை’ உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

Fire Crackers: ‘பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை’ உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

Stalin Navaneethakrishnan HT Tamil
Sep 22, 2023 11:16 AM IST

பட்டாசு வெடிக்க தடை விதித்து 2018-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

டில்லியில் பட்டாசு தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதித்ததை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.
டில்லியில் பட்டாசு தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதித்ததை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.

ட்ரெண்டிங் செய்திகள்

2018 தடையை அனைத்து அதிகாரிகளும் முறையாக அமல்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் மேலும் கூறியது.

கடந்த வாரம், நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் எம்.எம்.சுந்திரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை நீண்ட நேரம் விசாரித்து உத்தரவை ஒத்திவைத்தது.

2022 ஆம் ஆண்டு டெல்லியில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் மனோஜ் திவாரி ஒரு மனு தாக்கல் செய்தார். விசாரணையின் போது, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) மீது உயர் அதிகாரியாக செயல்பட முடியுமா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது மற்றும் முதன்மை நிறுவனங்களை ஒருவர் நம்ப வேண்டும் என்றும் குறிப்பிட்டது.

விசாரணையின் போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாடி, அரசு முன்மொழிவில் பேரியம் தடை செய்யப்பட்டது சரிதான் என்றும், ஆனால் அது 2018 தீபாவளிக்கு தான் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

டெல்லியில் பச்சை பட்டாசாக இருந்தாலும் மற்ற பட்டாசாக இருந்தாலும் அனைத்தும் தற்போது தடை செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு முதல் டெல்லி காவல்துறை பட்டாசுகளுக்கு நிரந்தர உரிமம் எதுவும் வழங்கவில்லை என்றும் பாடி நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும் அனைத்து நிரந்தர பட்டாசு உற்பத்தி உரிமங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், உரிமம் பெற்றவர்களின் அனைத்து வளாகங்களையும் போலீசார் ஆய்வு செய்வார்கள் என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

பட்டாசுகளை வெடித்தவர்களை தண்டிப்பது மட்டும் போதாது என்றும், பட்டாசு வெடித்தவர்களை அதிகாரிகள் கண்டறிய வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

2021 இல், உச்ச நீதிமன்றம் பட்டாசுகளைப் பயன்படுத்துவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்றும் பேரியம் உப்புகள் கொண்ட பட்டாசுகள் மட்டுமே தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் தெளிவுபடுத்தியது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்