Sukesh: சுகேஷ் சிறை அறையில் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள செருப்பு பறிமுதல்
Sukesh Chandrashekhar: ரூ.200 கோடி பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லியில் மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சுகேஷ் சந்திரசேகர்.
இரட்டை இலை சின்னம் பெற்றுத் தவருவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்த முயன்றவர் என குற்றம்சாட்டப்பட்ட சுகேஷின் சிறை அறையில் இருந்து ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள செருப்புகள், உயர் ரக ஜீன்ஸ் பேண்ட்கள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.
ட்ரெண்டிங் செய்திகள்
ரூ.200 கோடி பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லியில் மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சுகேஷ் சந்திரசேகர்.
இதுதொடர்பான வழக்கில் பாலிவுட் நடிகைகள் ஜாக்குலின் பெர்னான்டஸ், நோரா பதேஹி ஆகியோரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டனர்.
இந்நிலையில் அவரது சிறை அறையில் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்து செருப்பு இருந்தது கண்டறியப்பட்டது. ஜெயிலர் தீபக் சர்மா முன் நின்றுகொண்டு சுகேஷ் சந்திரசேகர் அழுவது போன்ற வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் சுகேஷ் சந்திரசேகருக்கு எதிராக வழக்கு பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சுகேஷுக்கு தற்போது வயது 33.
டாபிக்ஸ்