தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Parliament : மணிப்பூர் விவகாரம்.. எதிர்கட்சிகள் கடும் அமளி - 4 ஆவது நாளாக இரு அவைகளும் ஒத்திவைப்பு!

Parliament : மணிப்பூர் விவகாரம்.. எதிர்கட்சிகள் கடும் அமளி - 4 ஆவது நாளாக இரு அவைகளும் ஒத்திவைப்பு!

Divya Sekar HT Tamil
Jul 25, 2023 11:52 AM IST

மணிப்பூர் விவகாரத்தில், எதிர்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

4 ஆவது நாளாக இரு அவைகளும் ஒத்திவைப்பு
4 ஆவது நாளாக இரு அவைகளும் ஒத்திவைப்பு (ANI)

ட்ரெண்டிங் செய்திகள்

 இந்த விவகாரத்தில் நேரக் கட்டுப்பாடின்றி அனைத்துக் கட்சிகளும் பேசி விவாதம் நடத்தவும் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தின. இதுதொடர்பாக அமளி நீடித்ததால், கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே இரு அவைகளும் எந்த அலுவலையும் கவனிக்காமல் முடங்கின.

மணிப்பூர் சம்பவம் தொடர்பாக நேற்று வரை மூன்று நாட்கள் எதிர்க்கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் முடங்கின. அந்த வகையில் 4ஆவது நாளான இன்று காலை 11 மணிக்கு அவைகள் கூடின.

மக்களவை கூட்டம் தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு அமளியில் ஈடுபட்டன இதனால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நேற்று மணிப்பூர் விவகாரத்தில் எதிர்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிகழ்வின்போது ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், மாநிலங்களவையின் மையப் பகுதிக்கு சென்று நாற்காலியை சுட்டிக்காட்டியதால் சபாநாயகரின் உத்தரவுகளை மீண்டும் மீறியதற்காக அவர் அமர்வு முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்