NDA VS INDIA: ’மோடிக்கு டாட்டா காட்டுகிறாரா நிதிஷ்!' தேஜஸ்வி யாதவ் உடன் ஒரே விமானத்தில் டெல்லி பயணம்!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Nda Vs India: ’மோடிக்கு டாட்டா காட்டுகிறாரா நிதிஷ்!' தேஜஸ்வி யாதவ் உடன் ஒரே விமானத்தில் டெல்லி பயணம்!

NDA VS INDIA: ’மோடிக்கு டாட்டா காட்டுகிறாரா நிதிஷ்!' தேஜஸ்வி யாதவ் உடன் ஒரே விமானத்தில் டெல்லி பயணம்!

Kathiravan V HT Tamil
Published Jun 05, 2024 11:50 AM IST

இந்தியா கூட்டணியில் இணையுமாறு சந்திரபாபு நாயுடுவிடம் காங்கிரஸ் கட்சியின் டி.கே.சிவக்குமார் பேசி உள்ளதாகவும், சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமாரிடம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார் பேசி உள்ளதாகவும் ஊடங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

’மோடிக்கு டாட்டா காட்டுகிறாரா நிதீஷ்!' தேஜஸ்வி உடன் ஒரே விமானத்தில் டெல்லி பயணம்!
’மோடிக்கு டாட்டா காட்டுகிறாரா நிதீஷ்!' தேஜஸ்வி உடன் ஒரே விமானத்தில் டெல்லி பயணம்!

யார் யார் எத்தனை தொகுதிகளில் வெற்றி?

240 தொகுதிகளில் வென்று பாஜக தனி பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ளது. காங்கிரஸ் கட்சி 99 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 37 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 29 இடங்களிலும், திமுக 22 இடங்களிலும், தெலுங்கு தேசம் கட்சி 16 இடங்களிலும், ஐக்கிய ஜனதாதளம் கட்சி 12 இடங்களிலும், உத்தவ் தாக்ரேவின் சிவசேனா கட்சி 9 இடங்களிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 8 இடங்களிலும், சிவசேனா ஏக்நாத் ஷிண்டே கட்சி 7 இடங்களிலும், ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 5 இடங்களிலும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சி 4 இடங்களிலும், ராஷ்டிரிய ஜனதாதள் கட்சி 4 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி 4 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி 3 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 3 இடங்களிலும், ஜார்கண்ட் முக்தி மோர்சா கட்சி 3 இடங்களிலும், ஜனசேனா கட்சி 2 இடங்களிலும், சிபிஐ.எல்.எல் கட்சி 2 இடங்களிலும், ஜேடிஎஸ் 2 இடங்களிலும், விசிக 2 இடங்களிலும், சிபிஐ கட்சி 2 இடங்களிலும், ராஷ்டிரிய லோக்தள் கட்சி 2 இடங்களிலும், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளது. பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் இணைந்து 18 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது.

சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமாருக்கு டிமாண்ட்

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சந்திரபாபு நாயுடுவின், தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கட்சி மற்றும் இதர கட்சிகளின் ஆதரவு உடன் பாஜக ஆட்சி அமைப்பதற்கான சூழல் ஏற்பட்டு உள்ளது.

இந்தியா கூட்டணிக்கு தாவுகிறார நிதீஷ்?

இந்த நிலையில் இன்றைய தினம் டெல்லியில் இந்தியா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து ஒரே விமானத்தில் பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் மற்றும் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவரான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் செல்வது பேசு பொருள் ஆகி உள்ளது. 

நிதிஷுக்கு இந்தியா கூட்டணி அழைப்பா?

தேர்தல் வெற்றி தொடர்பாக நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோரை கூட்டணிக்குள் அழைப்பது குறித்து இன்று நடைபெறும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் கூட்டணி கட்சிகளிடம், ஆலோசித்தபின் முடிவு செய்யப்படும்” என்று கூறினார்.

நாயுடு, நிதிஷிடம் பேசிய சரத்பவார்?

இந்தியா கூட்டணியில் இணையுமாறு சந்திரபாபு நாயுடுவிடம் காங்கிரஸ் கட்சியின் டி.கே.சிவக்குமார் பேசி உள்ளதாகவும், சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமாரிடம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார் பேசி உள்ளதாகவும் ஊடங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

இந்தியா கூட்டணி உருவாக்கத்தில் நிதீஷ்

கடந்த ஜூன் மாதத்தில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து இந்தியா கூட்டணி அமைய ஆணிவேராக இருந்தவர் நிதிஷ்குமார். பீகார் மாநிலம் பாட்னாவில்தான் இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் நடைபெற்றது. 

இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற 5 மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி  4 மாநிலங்களில் தோல்வி அடைந்த நிலையில், இந்தியா கூட்டணியில் இருந்து பாஜக கூட்டணிக்கு நிதிஷ் தாவினார். இதனால் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி ஆதரவு நடைபெற்று வந்த நிலையில் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜக ஆதரவு உடன் மீண்டும் பீகார் முதலமைச்சர் ஆனார்.