INDIA Alliance: அதிரடி திருப்பம் ஏற்படுமா..- நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடுவை தொடர்பு கொண்டு பேசினாரா சரத் பவார்?
NDA: மக்களவைத் தேர்தல் வாக்குகள் எண்ணப்படுவதால் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் போன்ற பாஜக கூட்டணிக் கட்சிகளுடன் சரத் பவார் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை இந்தியா கூட்டணி கட்சிக்கு சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆதரவு தெரிவிக்குமா என அரசியல் சூழலில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

INDIA Alliance: அதிரடி திருப்பம் ஏற்படுமா?- நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடுவை தொடர்பு கொண்டு பேசிய சரத் பவார்! (ANI)
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும் முயற்சியில் புதிய தடைகளை சந்திக்க நேரிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.
ஆந்திராவில் பாஜக மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்ட சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கிறது.
ஆட்சியை இழக்கும் ஜெகமன் மோகன் ரெட்டி
அந்த மாநிலத்தில் ஆளும் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியை இழக்கிறார்.
