Amit Shah About Congress: ’தேர்தல் முடிந்தால் காங்கிரஸை பைனாகுலரில் கூட பார்க்க முடியாது!’ வியூகத்தை உடைத்த அமித்ஷா!
”Amit Shah About Congress: இந்த தேர்தலின் தொடக்கத்தில் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையைத் தொடங்கினார். ஆனால் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பைனாகுலர் உதவியுடன் கூட காங்கிரஸை கட்சியை பார்க்க முடியாது என அமித்ஷா தெரிவித்துள்ளார்”

’தேர்தல் முடிந்தால் காங்கிரஸை பைனாகுலரில் கூட பார்க்க முடியாது!’ வியூகத்தை உடைத்த அமித்ஷா! (PTI)
பாஜக ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீடு ரத்தாகுமா?
ஹரியானா மாநிலம் ரோத்தக் மக்களவைத் தொகுதியில் வரும் மே 25ஆம் தேதி அன்று ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஜஜ்ஜாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்தால் இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் பொய் கூறி வருகிறது என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
காங்கிரஸ் கட்சியை பைனாகுலரில் கூட பார்க்க முடியாது
பா.ஜ.க நாடாளுமன்றத்தில் இருக்கும் வரை, இட ஒதுக்கீட்டை யாரும் தொட முடியாது. இந்த தேர்தலின் தொடக்கத்தில் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையைத் தொடங்கினார். ஆனால் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பைனாகுலர் உதவியுடன் கூட காங்கிரஸை கட்சியை பார்க்க முடியாது.