டாடா நிறுவனத்தின் மூளை.. ஏழைகளுக்கு கார் கதவை திறந்தவர்.. யார் இந்த ரத்தன் டாடா?
குழுமத்தின் தலைவராக 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவனத்தை நிர்வகித்து வந்த ரத்தன் டாடா, மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த நிலையில், காலமானார். டாடா நிறுவனத்தில் அவரது பங்களிப்பு அசாத்தியமானது.

டாடா நிறுவனத்தின் மூளை.. ஏழைகளுக்கு கார் கதவை திறந்தவர்.. யார் இந்த ரத்தன் டாடா?
இந்திய தொழில் அதிபர் ரத்தன் டாடா, 1937ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி மும்பையில் பிறந்தவர். டாடா குழுமத்தின் சேர்மனாக 1991ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரையும், 2016 முதல் 2017ம் ஆண்டு வரையில் இருந்தவர். டாடா குழுமம் மும்பையைச் சேர்ந்த கூட்டமைப்பாகும்.
1962ல் தொடங்கிய பயணம்
இந்தியாவின் புகழ்பெற்ற தொழில் குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர். நியூயார்க்கின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் படித்தவர். அங்கு ஆர்கிடெக்சரில் பிஎஸ் படித்துவிட்டு, 1962ம் ஆண்டு இந்தியா திரும்பினார்.
இவர் டாடா குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களிலும் அனுபவங்களைப் பெற்றார். அதில் ஒன்றான ரேடியோ எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பொறுப்பு இயக்குனராக 1971ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். பின்னர் 1991ம் ஆண்டு டாடா நிறுவனங்களின் சேர்மனானார்.