உலக மாணவர் தினம்.. விதை அப்துல் கலாம் உடையது.. மாணவர் தினத்தின் முக்கியத்துவம் மற்றும் பொன்மொழிகள்
உலக மாணவர் தினம்.. விதை அப்துல் கலாம் உடையது.. மாணவர் தினத்தின் முக்கியத்துவம் மற்றும் பொன்மொழிகள் குறித்துப் பார்ப்போம்.

இந்தியாவின் 11ஆவது குடியரசுத் தலைவரான அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15-ம் தேதி உலக மாணவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. விண்வெளி விஞ்ஞானியாக தனது பணியைத் தொடங்கியது முதல் ஆசிரியராக தனது மாணவர்களுக்கு செய்த அர்ப்பணிப்பு வரை, கலாம் பல கீரிடங்களை தன் தலையில் சுமந்திருந்தார்.
அவுல் பக்கீர் ஜெயினுலாப்தீன் அப்துல் கலாம் 1931ஆம் ஆண்டு, அக்டோபர் 15ஆம் தேதி தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் படகு உரிமையாளரான ஜெயினுலாப்தீன் மற்றும் ஆஷியம்மா ஆகியோருக்கு மகனாக பிறந்தார். சிறு வயதிலிருந்தே விமானம், ராக்கெட், விண்வெளி ஆகியவற்றைப் பற்றி படிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார்.
அனைத்து சவால்களையும் தாண்டி, கலாம் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் (எம்ஐடி) ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் படித்து முடித்தார் மற்றும் ராக்கெட் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத் துறையில் பிரகாசமான வல்லுநராக மாறினார். அவரது வாழ்க்கை கதை கோடிக்கணக்கானவர்களுக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது.
