Kerala Girl: அழகி பட்டத்தை வென்ற சிறுமி - குவியும் பாராட்டுக்கள்!
கேரளாவைச் சேர்ந்த 10 வயது சிறுமி பிரின்சஸ் ஆப் ஆசியா என்ற அழகி பட்டத்தை வென்றுள்ளார்.
மேடையில் ஏறவே தயங்கும் குழந்தைகளுக்கு மத்தியில் 10 வயது சிறுமி ஒருவர் மேடை ஏறி ஆசிய அளவில் அழகி போட்டியில் கலந்து கொண்டு விருது பெற்றுள்ளார். துபாயில் நடைபெற்ற பிரின்சஸ் ஆப் இந்தியா என்ற பட்டத்தைக் கேரளாவைச் சேர்ந்த 10 வயது சிறுமி பெற்றுள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குருபஞ்சோலை என்ற பகுதியில் வசித்து வரும் ஜிம்மி, விஜி ஆகிய தம்பதியரின் மகள் ஆத்யா. சிறுவயதிலிருந்து பேஷன் ஷோக்களை ஆர்வத்துடன் பார்த்து வந்துள்ளார்.
பேஷன் ஷோக்களில் நடந்து வருவது போலவே நடை, உடை, பாவனை அனைத்தையும் கற்றுள்ளார். இதனைக் கண்ட அந்த சிறுமியின் பெற்றோர்கள் அதனை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்தி உள்ளனர். சிறு சிறு போட்டிகளில் கலந்துகொண்ட அந்த சிறுமி மலபாரில் நடந்த அழகி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.
இடுக்கி, திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற அழகி போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் துபாயில் நடந்த பிரின்சஸ் ஆப் ஆசியா போட்டியில் பங்கேற்கத் தேர்வானார். பின்னர் அந்த போட்டியில் வெற்றியும் பெற்று பட்டத்தையும் வென்றார்.
பத்து வயது சிறுமியான ஆத்யா வெற்றி பெற்றதற்குப் பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றன. தொடர்ந்து நாங்கள் எங்கள் மகளை ஊக்கப்படுத்துவோம் என அந்த சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
டாபிக்ஸ்