மழைக்கால தொற்றுகளில் இருந்து காத்துக்கொள்ள என்ன செய்யவேண்டும்? – மருத்துவர் விளக்கம்!
மழைக்கால தொற்றுகளில் இருந்து காத்துக்கொள்ள என்ன செய்யவேண்டும் என்று சித்த மருத்துவர் காமராஜ் விளக்குகிறார்.

மழைக் காலத்தில் காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும். இதனால் சளி, இருமல், காய்ச்சல் ஆகிய தொற்றுகள் ஏற்படும். இந்த தொல்லைகளில் இருந்து பார்த்துக்கொள்ள நாம் தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளவேண்டும். நிலவேம்பு குடிநீர் பருகுவதை வழக்கமாகக் கொள்வது, தொற்றுகளில் இருந்து தப்பித்துக்கொள்ள, மேலும் நீங்கள் மழைக்காலத் தொற்றுக்களில் இருந்து தற்காத்துக்கொள்ள என்ன நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் காமராஜ் சில விளக்கங்களைக் கொடுக்கிறது. எனவே மருத்துவர் கூறுவதை பின்பற்றி, மழைக்கால தொற்றுக்களில் இருந்து காத்துக்கொண்டு பயன்பெறுங்கள். மழைக் காலத்திலும் ஆரோக்கியமாக வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வந்தபின் புலம்புவதைவிட வருமுன் காப்பதே சிறந்தது.
நிலவேம்பு குடிநீர் தயாரிக்கும் முறை?
ஒரு நபருக்கு 5 கிராம் நிலவேம்பு குடிநீர் சூரணம் எடுத்துக்கொண்டு, (அதாவது ஒரு டீஸ்பூன்) 240 மில்லி லிட்டர் தண்ணீரில் போட்டு குறைவான தீயில் நன்றாக கொதிக்க வைக்கவேண்டும். அது 60 மில்லி லிட்டராகச் சுண்டவேண்டும். இதை காலையில் ஒரு வேளை தடுப்பு மருந்தாக எடுத்துக்கொள்ளலாம். மூன்று முதல் 12 வயது உள்ளவர்களுக்கு 30 மில்லி லிட்டரும், 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 30 முதல் 60 மில்லி லிட்டரும் எடுத்துக்கொள்ளலாம்.
காய்ச்சல் இருப்பவர்களுக்கு,
காய்ச்சல் இருந்தால் தினமும் இரண்டு வேளை உணவிற்கு முன 3 முதல் 7 நாட்கள் வரை தொடர்ந்து கொடுக்கலாம்.