Nellai White Kulambu : திருநெல்வேலி ஸ்பெஷல் வெள்ளை குழம்பு; தின்னத்தின்ன தெவிட்டாத சுவையில் செய்வது எப்படி?
Nellai White Kulambu : திருநெல்வேலி ஸ்பெஷல் வெள்ளை குழம்பு செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் – 10
முருங்கைக்காய் – 1
கத்தரிக்காய் – 1
வெண்டைக்காய் – 3
மாங்காய் அல்லது தக்காளி – 4 துண்டுகள்
வெந்தயம் – கால் ஸ்பூன்
புளி – பெரிய எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்
கொத்தமல்லித் தூள் – ஒரு ஸ்பூன்
பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன்
கொத்தமல்லி தழை – கைப்பிடியளவு
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கொத்து
எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
அரைக்க தேவையான பொருட்கள்
தேங்காய்த்துருவல் – முக்கால் கப்
சின்ன வெங்காயம் – 3
பூண்டு பற்கள் – 2
சீரகம் – கால் ஸ்பூன்
செய்முறை
காய்கறிகளை கழுவி நறுக்கிக் கொள்ளவேண்டும். புளியை இளம் சூடான நீரில் ஊறவைத்து 2 கப் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவேண்டும்.
மிக்ஸி ஜாரில் தேங்காய்த் துருவல், சின்ன வெங்காயம், பூண்டு பற்கள் மற்றும் சீரகம் சிறிதளவு தண்ணீர்விட்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும்.
ஒரு குழம்பு பாத்திரத்தில் புளிக்கரைசல், தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்து அதனுடன், நறுக்கிய முருங்கைகாய் மற்றும் கத்தரிக்காய் சேர்த்து கலந்து கொள்ளவேண்டும்.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயம் சேர்த்து சிவந்ததும் சின்ன வெங்காயம் மற்றும் நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து வதக்கவேண்டும். வெண்டைக்காய் வதங்கியதும் கலந்து வைத்துள்ள புளிக்கரைசலை கலந்து கொள்ளவேண்டும்.
மிதமான சூட்டில் மூடி வைத்து காய்கறிகளை வேகவிடவேண்டும். காய்கறிகள் வெந்தவுடன், மாங்காய் துண்டுகள் அல்லது நறுக்கிய தக்காளி சேர்த்து கொதிக்க விடவேண்டும்.
பின் அரைத்த தேங்காய் விழுது, பெருங்காயத்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கலந்து 5 நிமிடங்கள் குழம்பு நன்றாக கொதித்ததும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவேண்டும்.
கடாயில் எண்ணெய்விட்டு சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சூடான குழம்பில் சேர்த்து மூடி வைக்கவேண்டும். சுலபமான வெள்ளைக் குழம்பு தயார்.
குறிப்புகள்
இந்த குழம்பிற்கு நறுக்கிய வெள்ளை பூசணிக்காய் துண்டுகள் சேர்த்து செய்யலாம்.
மிளகாய்வற்றல், வரமல்லி, தேங்காய், சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் சீரகத்தை அம்மியில் அரைத்து சேர்க்கலாம்.
பொடிகளை வைத்தும் செய்யலாம். அம்மியில் அரைத்த மசாலா சேர்க்கும்போது குழம்பின் சுவை இன்னும் கூடுதலாக இருக்கும். உங்கள் கார அளவுக்கு ஏற்ப பொடிகளின் அளவை மாற்றிக்கொள்ள வேண்டும்.
மல்லித்தூளுக்கு பதிலாக சிறிது சாம்பார் பொடி சேர்த்துக் கொள்ளலாம். கடைந்த கீரை அல்லது தாளித்த பருப்பு வைத்து சூடாக பரிமாறவேண்டும். வீட்டில் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு சாப்பிடுவார்கள்.
இதில் பச்சை மிளகாய் மட்டும் சேர்த்து, மிளகாய்ப்பொடி, மஞ்சள் பொடி, மல்லிப்பொடி ஆகியவை சேர்க்காமல் விட்டால்தான் குழம்பு வெள்ளை நிறத்தில் இருக்கும்.
இவற்றை செய்யும்போது வெள்ளை நிறத்தில் வராதுதான். ஆனாலும் இது வெள்ளை குழம்பு என்று அழைக்கப்படுகிறது.
திருநெல்வேலி பகுதிகளில் இந்தக்குழம்பு தயாரிக்கப்படுவதால், இது திருநெல்வேலி ஸ்பெஷல் வெள்ளை குழம்பு என்று அழைக்கப்படுகிறது. இது வழக்கமான குழம்புகளைவிட சுவை நிறைந்ததாக இருக்கும்.
நன்றி – விருந்தோம்பல்.

டாபிக்ஸ்