Navaratri Prasadam: உங்க வீட்டுல கொலு வச்சு இருக்கீங்களா? பிரசாத லிஸ்ட் ரெடி!
Navaratri Prasadam: இந்தியாவில் கொண்டாடப்படும் இந்து விழாக்களில் முக்கியமான விழாவாக நவராத்திரி விழா உள்ளது. இது ஒவ்வொரு பகுதிகளிலும் மாறுபட்ட கொண்டாட்ட முறைகளை கொண்டுள்ளது.
இந்தியாவில் கொண்டாடப்படும் இந்து விழாக்களில் முக்கியமான விழாவாக நவராத்திரி விழா உள்ளது. இது ஒவ்வொரு பகுதிகளிலும் மாறுபட்ட கொண்டாட்ட முறைகளை கொண்டுள்ளது. தமிழ் நாட்டில் இது கொலு வைத்து 9 நாட்கள் இரவு பூஜை செய்து வழிபாடு நடத்தி கொண்டாடப்படுகிறது. இந்த நவராத்திரியானது அம்பிகை மகிஷாசூரன் எனும் அரக்கரை அளிக்க 9 நாட்கள் தவம் இருந்து சக்தியை பெற்று அந்த அரக்கரை அளித்ததாக கூறப்படுகிறது. எனவே இந்த விழாவை 9 நாட்கள் அம்மனுக்கு பூஜை செய்தி வழிபடுகின்றனர். இந்த 9 நாட்களும் வீடுகளுக்கு கொலு பார்க்க வருவோர்க்கு பிரசாதம் வழங்க வேண்டும். அதற்கான சில பிரசாத உணவு செய்யும் முறைகளை இங்கு காண்போம்.
பருப்பு செய்யும் பொடி
பிரசாதமாக கொடுக்க விரும்பும் பயறுகளுடன் பொடியை சேர்க்க வேண்டும். அதற்கு 1 டீஸ்பூன் சோம்பு, 1 டீஸ்பூன் சீரகம், 2 காய்ந்த மிளகாய், 1 டீஸ்பூன் தேங்காய் துண்டு ஆகியவற்றை மிதமான சூட்டில் வறுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ராஜ்மா
ராஜ்மா செய்வதற்கு முதல் ஒரு கப் ராஜ்மாவை ஊற வைத்து, வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் சிறிதளவு தேங்காய் துருவல், தேவையான அளவு உப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பச்சை மிளகாய், ராஜ்மா, மஞ்சள் தூள், தேங்காய் துருவல், தேவையான அளவு உப்பு சேர்த்து மூன்று நிமிடம் நன்றாக கிளறவும். பிறகு, அதில் பொடி சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.