Morning Quotes : உங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கவேண்டுமா? அப்போ இதையெல்லாம் செய்ங்க!
Morning Quotes : உங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கவேண்டுமா? அப்போ இதையெல்லாம் செய்யுங்கள் போதும். உங்களின் நினைவாற்றல் முதல் மனத்தெளிவு வரை உதவும்.

உங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க வேண்டுமென்றால் இந்திய கலாச்சாரத்தில் உள்ள செயல்பாடுகள் என்னவென்று தெரிந்துகொள்வது அவசியம். மூளையை ஷார்ப்பாக வைத்துக்கொள்ள பயன்படுத்தப்படும் நுட்பங்களை தெரிந்துகொண்டு அவற்றை பின்பற்றி பலன்பெறுங்கள். பண்டைய கால இந்திய பாரம்பரியத்தில் சில ஆச்சர்ய நடவடிக்கைகள் பின்பற்றப்படுகின்றன. உங்கள் ஒட்டுமொத்த நலன் என்றால் அதில் மனத்தெளிவு மற்றும் மூளையின் வளர்ச்சி ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த பழமையான மன ஆரோக்கியத்தை அதிகரிக்கும் விஷயங்களை நீங்கள் பின்பற்றினால், அது உங்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்க்கும். நினைவாற்றலை அதிகரிக்கும். உங்களின் மூளையைத் தூண்டும். எனவே இந்த மூளைக்கு ஊக்கமளிக்கும் விஷயங்களை நீங்கள் பின்பற்றுவது உங்களின் அறிவை அதிகரித்து உங்களின் கவனம் மற்றும் மூளையை சுறுசுறுப்பாக்க உதவும்.
மூளையை வலுப்படுத்தும் ஆயுர்வேத முறை
ஆயுர்வேதம் என்பது மூளையை சுறுசுறுப்பாக்கும் ஒரு பொக்கிஷம் ஆகும். இது உங்களின் மூளையை ஷார்ப்பாக்கும் எண்ணற்ற விஷயங்களைக்கொண்டுள்ளது. அஷ்வகந்தா, சங்குப்பூ, பிரம்மி மற்றும் வல்லாரைக்கீரை ஆகியவற்றை பயன்படுத்தி மூளையை ஷார்ப்பாக வைத்திருந்தார்கள். மேலும் மூளையை ஷார்பாக்கும் மூலிகை தீர்வாக நினைவாற்றல், மனநிலையை அதிகரிக்கச் செய்யும் பழக்கவழக்கங்களைக் கொண்டிருந்தார்கள்.
மந்திரங்கள் ஓதுவது
மூளையை சுறுசுறுப்பாக்க மந்திரங்கள் ஓதுவது மிகவும் அவசியம். ஓம், காயத்திரி மந்திரம் ஆகியவற்றை ஓதும்போது அது மூளையின் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும். இதை மீண்டும், மீண்டும் கூறும்போது, உங்கள் நரம்பியல் வழிகள் சுறுசுறுப்பாகும், கவனம் அதிகரிக்கும் மற்றும் மனஅழுத்தம் குறையும்.