‘முருங்கை வைத்தவன் வெறுங்கையோடு போவதில்லை’ முருங்கைக்காய் ரசம்! எப்படி செய்வது என பாருங்க! இதோ ரெசிபி!
‘முருங்கை வைத்தவன் வெறுங்கையோடு போவதில்லை’ என்பது பழமொது. முருங்கைக்காய் ரசம் செய்வது எப்படி என்று பாருங்கள். அதன் ரெசிபி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

முருங்கை மரத்தின் காய், பட்டை, பிசின், கீரை என அனைத்து பாகங்களுமே நமது உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கக்கூடியவைதான். முருங்கைக்கீரையில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. அதை உணவில் தினமுமே சேர்த்துக்கொள்வது உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. காயிலும் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். முருங்கை மரம் வைத்திருந்தால், 80 வயதிலும் தடி ஊன்றாமல் நடக்கலாம் என்பது பழமொழி. ஏனெனில் முருங்கைக்காயை அன்றாடம் உணவில் சேர்க்கும்போது அது உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. முருங்கைக்காயை சாம்பாரில் சேர்த்துதான் சாப்பிட்டு பழக்கம். ஆனால் அதன் நன்மைகளை தெரிந்துகொண்டால், நீங்கள் அதை அனைத்து உணவிலும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணுவீர்கள். இப்போது முருங்கைக்காயை பொடி செய்து விற்கிறார்கள். நீங்கள் தினமும் எந்த சாம்பார் செய்தாலும் அதில் அந்தப்பொடியை சேர்த்துக்கொள்ளலாம்.
முருங்கைக்காயின் நன்மைகள்
ரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிக்கிறது.
உடலில் நோய் எதிர்ப்பை அதிகரிக்க உதவுகிறது.