Chettinadu White Kuruma : நாவில் எச்சில் ஊறவைக்கும் செட்டிநாடு வெள்ளை குருமா! டிஃபனுக்கு பெஸ்ட் சாய்ஸ்!
Chettinadu White Kurma : ஒவ்வொருவரும் ஒரு மாதிரி குருமா செய்வார்கள். இங்கு கொடுப்பட்டுள்ள செட்டி நாடு வெள்ளை குருமா அல்லது நவரத்ன குருமாவை நீங்கள் மட்டன் சிக்கன் சேர்த்தும் செய்யலாம். காய்கறிகள் சேர்க்காமல் இவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.
செட்டிநாடு உணவு வகைகளுள் வெள்ளை குருமா என்பது பிரபலமான ஒன்று. இதில் நவரத்ன குருமாவும் செய்யலாம். இது கீரிமியாக இருக்கும். இதற்கு மசாலா குறைவாக இருக்க வேண்டும். இதை டிஃபனுக்கு சிறந்த உணவாக்கிக்கொள்ளலாம். இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா, இடியாப்பம், ஆப்பம் என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.
ட்ரெண்டிங் செய்திகள்
ஒவ்வொருவரும் ஒரு மாதிரி குருமா செய்வார்கள். இங்கு கொடுப்பட்டுள்ள செட்டி நாடு வெள்ளை குருமா அல்லது நவரத்ன குருமாவை நீங்கள் மட்டன் சிக்கன் சேர்த்தும் செய்யலாம். காய்கறிகள் சேர்க்காமல் இவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.
நீங்கள் எத்தனை காய்கறிகள் வேண்டுமானாலும் சேர்த்து இந்த குருமாவை செய்யலாம். இது வெள்ளை குருமா என்பதால் தக்காளி பீட்ரூட் போன்ற காய்கறிகளை தவிர்க்க வேண்டும். மிளகாய் தூளுக்கு பதில் பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும். மஞ்சள்தூள் சேர்க்கக்கூடாது.
தேவையான பொருட்கள்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – சில துளிகள்
கொத்தமல்லித்தழை – கைப்பிடி அளவு
காய்கறிகள்
ஒன்று முதல் 2 கப் நறுக்கிய காய்கறிகள் உங்களுக்கு தேவை. உங்களுக்கு பிடித்த காய்கறிகளை சேர்த்துக்கொள்ளலாம்.
கேரட் – 1
உருளைக்கிழங்கு சிறியது – 1
பீன்ஸ் – 8
பச்சை பட்டாணி – கால் கப்
காளிபிளவர் – அரை கப் (ஒரு பூவில் இருந்து இரண்டு அல்லது மூன்று இதழ்களை பிரித்து சிறிதாக கட் செய்துகொள்ள வேண்டும்)
பரங்கிக்காய் – கால் கப்
குடை மிளகாய் – அரை
நூல் கோல் – 1 (சிறியது)
பட்டர் பீன்ஸ் அல்லது உங்கள் விருப்பத்துக்கு ஏதேனும் ஒரு பீன்ஸ் – கால் கப்
அரைக்க
பச்சை மிளகாய் – 6
இஞ்சி – 1 இன்ஞ்
பூண்டு – 6 பல்
தயிர் – 1 கப்
தேங்காய் – 6 ஸ்பூன்
முந்திரி – 10 தண்ணீரில் ஊறவைத்தது
பொட்டுக்கடலை – 2 ஸ்பூன் ஊறவைத்தது
சோம்பு – 1 ஸ்பூன்
கசகசா – 2 ஸ்பூன்
கொத்தமல்லிப் பொடி – 2 ஸ்பூன்
தாளிக்க
எண்ணெய் -1 டேபிள் ஸ்பூன்
முழு கரம் மசாலா – பிரியாணி இலை – 1, பட்டை, கிராம்பு – 1, ஏலக்காய் – 1, கிராம்பு – 1
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, முழு கரம் மசாலா சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் வெங்காயம் சேர்த்து அது கண்ணாடி பதம் வரும் வரை வதக்க வேண்டும்.
பின்னர் ஒவ்வொரு காய்கறியாக சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் போதியளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். காய்கறிகளை சேர்க்கும்போது எளிதாக வேகும் காய்கறிகளை கடைசியாக சேர்க்க வேண்டும். கடினமான காய்களை முதலில் சேர்த்து சிறிது நேரம் வதக்கி அது வேகும் வரை நேரம் கொடுக்க வேண்டும். காய்கறிகள் வேகும் வரை காத்திருக்க வேண்டும். நீங்கள் குக்கரில் வேகவைத்து வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.
காய்கறிகள் வெந்தவும், அரைக்ககொடுத்த அனைத்தையும் அரைத்து மசாலா விழுதையும் இதில் சேர்க்க வேண்டும்.
காய்கறிகளுடன், மசாலாவும் சேர்ந்து சிறிது நேரம் வேக விட வேண்டும். தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும்.
தயிர், எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். தக்காளி சேர்க்காததால் புளிப்பு சுவைக்கு அது தேவை.
அடுப்பை அனைத்து விட்டு, கொத்தமல்லித்தழை தூவ வேண்டும். கடைசியாக கொஞ்சம் தேங்காய் எண்ணெய் விடவேண்டும் அல்லது நெய் சேர்க்கலாம்.
சுவையான செட்டிநாடு குருமா சாப்பிட தயாரகிவிட்டது.
டிஃபனுடன் பரிமாறலாம். அத்தனை காய்கறிகள் சேர்த்து செய்திருப்பதால், உடலுக்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது.
டாபிக்ஸ்