தேங்காய் சேர்க்காமல் ஒரு கிரேவி! டிபஃனுக்கு செம்ம காம்போ! உச்சுக்கொட்டி சாப்பிடும் சுவையில் செய்யலாமா?
தேங்காய் சேர்க்காமல் ஒரு கிரேவி செய்யலாமா? அனைத்து டிபஃனுக்கும் செம்ம காம்போ, உச்சுக்கொட்டி சாப்பிடும் சுவையில் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

பொதுவாகவே பூரி, சப்பாத்தி, இட்லி, தோசை என அனைத்துக்கும் தொட்டுக்கொள்வதற்கு என்ன செய்வது என்ற குழப்பம் நமக்கு எப்போதும் இருக்கும். எத்தனை சுவையான சட்னி என்றாலும் சிலருக்குப் பிடிக்காது. தேங்காய் அல்லது தக்காளி என இரண்டு வகைச் சட்னியைத்தான் அதிகளவில் செய்கிறோம். இதனால் அவற்றை பார்க்கும்போதும் சலிப்பு ஏற்படுகிறது. இதனால் எப்போதாவது புதினா, மல்லி, கறிவேப்பிலை, இஞ்சி, என வித்யாசமான சட்னிகளை தேர்ந்தெடுக்கிறோம். இவற்றை தவிர வேறு எதுவும் கிடையாதா என கேட்கும் சட்னி பிரியர்களுக்குத் தான் இந்த ரெசிபி. உண்மையில் இட்லி, தோசை என எதுவாக இருந்தாலும், அதை சாப்பிடும் அளவு சட்னியின் சுவையைப் பொறுத்து மாறுபடும். ஏனெனில் சூப்பர் சுவையான சட்னி என்றால் கட்டாயம் இரண்டு, மூன்று இட்லிகள் அதிகம் சாப்பிடுவார்கள். சட்னி நன்றாக இல்லையென்றால், அவ்வளவாக எடுக்காது. இந்த கிரேவி செய்தால் கட்டாயம் நீங்கள் இட்லி மற்றும் தோசையை ஊற்றிக்கொண்டே இருக்கவேண்டும். அத்தனை சுவை நிறைந்ததாக இருக்கும். இது கிரேவி பதத்தில் இருக்கும். ஆனால் இதில் நாம் தேங்காய் சேர்க்கப்போவதில்லை. இதை செய்வது எப்படி என்று பாருங்கள்.
தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம் – 4
பூண்டு – 25 பல்