தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: இரு பக்க கச்சேரி..பிறந்த நாள் பரபரப்பில் கார்த்தி.. சிக்குவாரா தீபா.. கார்த்திகை தீபம் அப்டேட்ஸ்!

Karthigai deepam: இரு பக்க கச்சேரி..பிறந்த நாள் பரபரப்பில் கார்த்தி.. சிக்குவாரா தீபா.. கார்த்திகை தீபம் அப்டேட்ஸ்!

Kalyani Pandiyan S HT Tamil
Jul 20, 2023 01:16 PM IST

கார்த்திகை தீபம் சீரியலில் இன்று நடக்கப்போகும் நகர்வுகளை இங்கே பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்
கார்த்திகை தீபம்

ட்ரெண்டிங் செய்திகள்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். 

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிராமி ராஜஸ்ரீக்கு போன் செய்து தனது வீட்டில் கார்த்தியின் பிறந்த நாளுக்கு பாட கூப்பிடுகிறாள். இந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்!

அதாவது, தீபாவும் கார்த்தியும் காரில் வந்து கொண்டிருக்கும் போது, கச்சேரி பற்றி சொல்ல ராஜ ஸ்ரீ, ரூபாஸ்ரீ என இருவரும் தீபாவுக்கு போன் செய்கிறார்கள் அவள் தெரியாத நம்பர் என்று சொல்லி போனை கட் செய்து விட, திரும்பவும் போன் வர கார்த்தி எடுத்து பேச சொல்கிறான். பிறகு தீபா கவிதா அப்படி யாரும் இல்லை என பேசி போனை கட் செய்து சமாளித்து விடுகிறாள்.

அதன் பிறகு இருவரும் வீட்டுக்கு வர ஏற்பாடுகள் எல்லாம் பலமாக நடந்து கொண்டு இருக்கின்றன.

அபிராமி நாளைக்கு உன்னுடைய பிறந்த நாளை கொண்டாடிய ஆக வேண்டும் என சொல்கிறாள். மீனாட்சி நாளைக்கு உன் புருஷன் பிறந்தநாளுக்கு என்ன தர போற என தீபாவிடம் கேட்க அவள் தெரியல அக்கா என்று சொல்கிறாள்.

அடுத்ததாக தீபா ரூபாஸ்ரீக்கு போன் செய்து கார்த்தி பக்கத்தில் இருந்ததால் பேச முடியவில்லை என்று சொல்கிறாள். அதற்கு ரூபாஸ்ரீ நாளைக்கு ஒரு கச்சேரி இருக்கு என்று சொல்ல, தீபா இந்த வீட்ல பொய் எல்லாம் சொல்லிட்டு வர முடியாது என்று பதறுகிறாள். 

கச்சேரியே அங்க தான், கார்த்தியின் பிறந்த நாளுக்காக பாட தான் வரோம் என்று சொல்கிறாள். இதனால் தீபா என்ன செய்வது எப்படி சமாளிப்பது என தெரியாமல் முழிக்கிறாள்.

மேலும் மீனாட்சியிடம் இந்த விஷயத்தை சொல்ல அவள் கார்த்தியிடம் சொல்லி விடலாமா என்று கேட்க, தீபா வேண்டாம் என்று சொல்கிறாள். மேலும் பாலில் அடித்து சத்தியம் செய்திருக்கேன், அதனால் கண்டிப்பா பாடித்தான் ஆகணும் என்று சொல்ல சரி பார்த்துக்கலாம் விடு என்று சொல்கிறாள்.

 

அதன் பிறகு நாளைக்கு எப்படிபோகும்னு தெரியல என்று கார்த்திக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல போய் அவனை வெளியே கூப்பிட்டு கை கொடுக்க போகிறாள்  அங்கு அபிராமி மற்றும் நட்சத்திரா வந்து நிற்க தீபா வாழ்த்து சொல்ல முடியாமல் நிறுத்தி விடுகிறாள். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்