விஜயை தாண்டி வசூல் கொடுக்க இங்கு நிறைய ஆட்கள் இருக்கிறார்கள்.. சினிமா ஒருவரை நம்பியே இருக்காது - திருப்பூர் சுப்ரமணியம்!
விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு செல்வதால் நிச்சயம் திரைத்துறைக்கு எந்த விதமான நஷ்டமும் இல்லை என்று சில சர்ச்சையான கருத்துக்களை பேசி இருக்கிறார் தமிழக திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன்.

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய். இவர், உச்சத்தில் இருக்கும் போதே சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அறிவிப்போடு நிறுத்திவிடாமல், தமிழக வெற்றிக் கழகம் எனும் புதிய கட்சி, கட்சிக்கான கொடி, கட்சிப் பாடல் போன்றவற்றை அறிமுகம் செய்தார். பின், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசன், முதல் மாநாடு என கட்சிப் பணிகளில் பரபர்பபாக ஈடுபடுகிறார்.
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு
தளபதி விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டி வி சாலை பகுதியில் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் இரவு, பகல் என சுழன்றவாறு செய்து வருகின்றனர். இதைடுத்து கட்சியின் முதல் மாநாடுக்கான பந்தகால் நடும் விழா சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை ஆகஸ்ட் 22ஆம் தேதி அறிமுகம் செய்தார் தளபதி விஜய். இந்த நிகழ்வில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் முதல் முறையாக கட்சி கொடியை ஏற்றினார். அத்துடன் பிளாக் ஆந்தம் என்ற பாடலும் வெளியிடப்பட்டது.